ஆபத்சகாயேச்சுரர் Abathsagayesurar Get link Facebook Twitter Pinterest Email Other Apps May 04, 2020 தூபமோடு ஓர்தீபம் வைத்தரனை பரவி நீபமலரொடு சுகந்த நீரைச் சொறியேர்காள் பாபசமேத நும் துயரைத் தீர்த்திடுமோ? ஆபத்திலஞ்சே லென்பானினடி ஆற்றி தொழுக! Get link Facebook Twitter Pinterest Email Other Apps
அருள்மிகு அங்காளம்மன் அந்தாதி Arulmigu Angalamman Anthathi June 11, 2020 அருள்மிகு அங்காளம்மன் அந்தாதி Arulmigu Angalamman Anthathi [ PDF ] புற்றுக் கோயில் உறையும் அருள்மிகு அங்காளம்மன் அந்தாதி. விநாயகர் காப்பு. பூரண கும்பமதில் பொலிவுற்றிடும் பவானியை நாரணன் சோதரியை நளினமிகு நங்கையை, ஆதி ஆரண முதல்வன் ஆரணங்கை அங்காளியைப் பாட வாரண முகத்தனே! வரம் சித்தி ஞானம் அருளுக! மானே ! மரகதமே ! மாசிலாயென் மாணிக்கமே ! மலர் தேனே சொரிந்தேன் திகைப்புற்று நின் திருப்பாதங்களில் யானே பெறுவது யாவும் இனிதே யமைய வருளுக! வானே புகழ் அங்காளியே வரந்தருங் கற்பகமே! (1) கற்றைவார் சடையனார் கனியே! கண்மணியே! கதியே! நற்தவத்தோர் போற்றும் நங்கையே நாடும் பொருளுஞ் சுற்றமும் நீயே என்றிருந்தேன் சொல்லொணா இடர் வரும் அற்றைக்கு வந்து அருளுக அங்காளியே என்னுளே ! (2) என்னுளே வாழ் ஈசன் இடபாகத்தவளே ! இமகிரி மன்னன் பெற்ற மாதுளம் பூவிதழ் முகத்தவளே ! அன்னமே! அங்காளியே ! அலங்கார வல்லியே!. உன்னையே தொழுதேன் உய்வித்து அருளாய் பொற்பதமே ! (3) பதமே நாடி தினம் பாங்குடனே சொன்னேன் குறைகளை இதமாக ஓர் சொல் பகராயோ? எளியேன் முன் இரங்காயோ? உதய சூரியன் ஒளி பிழம்பாய் ஓங்காரரூபமாய் அதரமே திறவாய் அங்கா Read more
செந்திலாதிபன் செண்பகமாலை மூலம் Senthilathiban Shenbaga Malai Moolam May 02, 2020 செந்திலாதிபன் செண்பகமாலை விநாயகர் காப்பு வேண்டு வரமீயும் வேலவனின் புகழ் பாடும் நீண்டு நிகரிலா நிதியாஞ் செண்பக மாலையை யாண்டுமிரு வேளையும் இசையால் செப்பிட தூண்டுகை விநாயக! துணைபுரிக எந்தனுக்கு! தண்டையணி என்ற திருப்புகழ் பண்டை வினைகள் யாவும் பறந்தோட ஈராறு கண்களும் ஓராறு முகமுங் கரமதில் வேலுங் தண்டையணி பாதமுங் கொண்டு என்முன் தோன்றிடுக! அண்டர்புகழ் திருச்செந்திலம்பதி வாழ் செண்பகமே! 1 நிலையாப் பொருளை என்ற திருப்புகழ் நிலையாப் பொருளை உடலாக் கொண்டு நாளுமுழன்று தொலையாப் பிணியொடு துவண்டிடுமடியேன் வினையை குலைத்திடுக கூரான வேல் கொண்டு ! எழுகின்ற அலைசூழுந் திருச்செந்திலம்பதி வாழ் செண்பகமே! 2 வஞ்சங் கொண்டுந்திடு என்ற திருப்புகழ் வஞ்சங் கொண்டு வெற்பெனெ நின்ற சூரன் தோளையுமவன் நெஞ்சையும் பிளந்து சேவலும் மயிலுமாக்கி நிதம் அஞ்சிய அமரர் தளையும் நீக்கிய நீ அடியேன் சஞ்சலந் தவிர் திருச்செந்திலம்பதி வாழ் செண்பகமே! 3 Read more