கங்காதரேச்சுரர் Gangatharechurar

அங்கியை யோர் யங்கையிலடக்கி யரவொடு கங்கையைச் சுழல வைத்தச் சதுரரே சங்கையை தவிர்த்திட காரணமானவரவரே உங்கள் வல்வினை மாய்க்க வல்லவராவார்! அங்கியை ஓர் அங்கையில் அடக்கி அரவொடு கங்கையைச் சுழல வைத்தச் சதுரரே சங்கையை தவிர்த்திட காரணமானவர் அவரே உங்கள் வல் வினை மாய்க்க வல்லவர் ஆவார்! அங்கி - அக்கினி, சங்கை - பகை, ஐயம், அங்கை - உள்ளங்கை, வல் - வலிமை, அரவு - நாகம் , சதுரர் - நான்கு வேதங்களுக்கு நாயகன் (ஈசன்) பொழிப்புரை:- அக்கினியை ஒரு உள்ளங்கையில் அடக்கி, நாகமொடு கங்கையை (முடியில்) சுழல வைத்த நான்கு வேதங்களுக்கு நாயகனே, பகை நீங்கிட காரணமானவர் அவரே உங்கள் வலிமை மிக்க வினையை அழிக்க வல்லவர் ஆவார்! கருத்துரை:- நான்கு வேதங்களுக்கும் தலைவனாக விளங்கக்கூடிய ஈசன் தனது சடா முடியில் நாகத்தையும், விரைவாகச் சுழன்று ஓடுகின்ற கங்கையையும் வைத்துத் தனது உள்ளங்கை ஒன்றில் அக்கினியையும் அடக்கிக் காட்சி தருபவர். அவர் எழுகின்ற ஐயமும், வருகின்ற பகையும் நீங்குவதற்கு காரணமாக இருப்பவர். அவரே உங்கள் வலிமை வாய்ந்த வினைகள் அழிக்கவும் வல்லவர் ஆவ...