Posts

Showing posts from April, 2021

குலைவணங்கீசர் KulaiVanangeesar

Image
 

தென்பெண்ணேச்சுரர் ThenPennechurar 2

Image
  அன்றாலமர் அண்ணலை ஆதியான அரனை சென்று தொழுது சுற்றி உருகிச் செங்கணே! என்று கொண்டாடி அருளை பெறாமலழி வேனோயுன் துன்று பொற் கழல் சேர்வ தெக்கால மறியேனே! அன்று ஆல் அமர் அண்ணலை ஆதியான அரனை சென்று தொழுது சுற்றி உருகிச் செங்கணே! என்று கொண்டாடி அருளை பெறாமல் அழிவேனோ உன்  துன்று பொற் கழல் சேர்வது எக்காலம் அறியேனே! அண்ணல் :-  வணங்க தக்க,   ஆதி –  மூலம்,  முழுமுதல்,   அரன் –  சிவன்,  செங்கணே -  சிவந்த கண்,   துன்று -  ஒன்று சேர்ந்த,   கழல்  - திருவடி பொழிப்புரை:- அன்று ஆல மரம் (கீழ்) அமர்ந்த வணங்க தகுந்தவனை மூலமாகிய சிவனை  சென்று வணங்கி வலம் வந்து உருகிச் சிவந்த கண்களையுடையவனே  என்று புகழ்ந்து அருளை பெறாமல்  அழிவேனோ  உனது ஒன்றாக சேர்ந்த பொன்னார் திருவடியை சேர்வது எப்பொழுது (என்று) அறியேனே!  கருத்துரை:-  அன்று ஆலமரங் கீழே அமர்ந்து சனகாதிய முனிவர்களான சனகர், சனந்தனர், சனாதனர், சனற் குமாரர் எனும் நால்வருக்கு உபதேசித்தருளிய வணங்குவதற்குரிய இறைவனாக மூல முழுமுதற் பொருளாய் திகழ்பவனை சென்று வணங்கி உளம் உருகி வலம் வந்து சிவந்த கண்களையுடையவனே என்று புகழ்ந்து போற்றிக் கொண்டாடி அவன் அருளை பெறாமலேயே யான் இவ்வுல

வில்வவனேச்சுரர் VilvaVanechurar

Image
 

திருவட்டீச்சுரர் மாலை Thiruvateechurar Malai

Image
திருவட்டீச்சுரர் மாலை    ThiruVateechurar Malai   [ Blog ]        [ PDF ]

இரத்தினகிரி வாழ் பாலமுருகன் இரத்தின மாலை விரிவுரை Rathinagiri Vazh Balamurugan RathinaMalai ViriUrai

Image
  இரத்தினகிரி வாழ்  பாலமுருகன்  இரத்தினமாலை  விரிவுரை Rathinagiri Vazh Balamurugan RathinaMalai ViriUrai       இரத்தினகிரி வாழ் பாலமுருகன் இரத்தினமாலை

அயிராவதேச்சுரர் Iyravathechurar

Image
மருந்துசேர் மருந்தினை மாலய னரனான பெருந்சோதி சுயம்புவை முச்சுடரை தேவனை அருவ வுருவனை புராந்தகனை தொழ இருமையிலு மினிமறுமையிலும் அவனருள் கூடுமே! மருந்து சேர் மருந்தினை மால் அயன் அரன் ஆன பெரும் சோதி சுயம்புவை முச் சு டரை தேவனை அருவ உருவனை புராந்தகனை தொழ இருமையிலும் இனி மறுமையிலும் அவன் அருள் கூடுமே! மருந்து  –   மூலிகை,   இருமை -  இப்பிறவி, மறுமை –  விண்ணுலகு,   சேர் -  கலந்த, மருந்து  –   சிவன்,   சுயம்பு -  தானாய் தோன்றிய, முச்சுடர் -  மூன்று ஒளி (சூரியன்,  சந்திரன்,  அக்கினி) அருவம் -   புலப்படாத.       பொழிப்புரை:- மூலிகை கலந்த மருந்தைத் திருமால் பிரம்மன் ருத்ரன் ஆகிய  பெருஞ்சுடரை தானாய் தோன்றியவனை மூன்று ஒளியை தேவனை புலப்படாத வடிவனை முப்புரங்களுக்கு இயமனை வணங்க  இப்பிறவியிலும் இனி விண்ணுலகிலும் அவன் (ஈசன்) அருள் சேருமே! கருத்துரை:-   பல மூலிகைகளை ஒன்று சேர்த்து உருவாக்கிய கலவை ஆகிய மருந்தாக இருந்து நோய்களைக் குணபடுத்தும் ஓர் அறிய பரிகார பொருளைப் போலத் திகழ்பவனை, திருமால், பிரம்மா, ருத்திரன் என மூவராய் நின்று அருள் புரிபவனை, காண்பதற்கரிய சோதி பிழம்பாய் நின்றானை, தானே தோன்றினானை, சூர

சிவகிரிநாதேச்சுரர் மாலை விரிவுரை SivagiriNathechurar Malai ViriUrai

உ திருச்சிற்றம்பலம் அருள்மிகு சிவகிரிநாதேச்சுரர் மாலை சுவாமி    –     சிவகிரிநாதர். அம்பாள் –    இளங்கிளி மொழியாள் . விருட்சம்  –     பவழ மல்லி. தீர்த்தம்    –    சரவண பொய்கை,  சிவகிரி தீர்த்தம்.    காலங்கள் பல நகரச் செய்தானை தன்னை நிதங்    கண்குளிர காண்பாரைக் காட்டுவித்தானை கோலங்கள் பலக் கொண்டு கோரினார்க்கருளிட    குறுகியே சென்றானை கோமகனு மருச்சித்த ஆலமுமத்தியு மடர்ந்திடும் ஈசன் மலையில்    அழகொளிருமிளங்கிளி மொழியாளுடன் வந்த சீலனைச் சித்தனை சிவகிரி நாதேச்சுரனை    சிந்தித்து வணங்கிட யவனியிலினிதிருப்பீர் ! (1) காலங்கள் பலநகரச் செய்தானை தன்னை நிதங்    கண்குளிர காண்பாரைக் காட்டு வித்தானை  கோலங்கள் பலக் கொண்டு கோறினார்க்கு அருளிட    குறுகியே சென்றானை கோமகனும் அருச்சித்த  ஆலமும் அத்தியும் அடர்ந்திடும் ஈசன் மலையில்    அழகு ஒளிரும் இளங்கிளி மொழியாள் உடன் வந்த  சீலனைச் சித்தனை சிவகிரி நாதேச்சுரனைச்     சிந்தித்து வணங்கிட அவனியில் இனிது இருப்பீர்! கோமகன் –   இந்திரன்,    குறுகி –   சுருங்கி,  கீழ் இறங்கி,  சீலம்  –   நற் குணங்கள். கருத்துரை - இவ்வுலகில் அன்றிலிருந்து இன்றுவரை நாட்கள் ஒன்றன் பி

விசுவநாதேச்சுரர் ViswaNathechurar

Image
சடையொடு யோர்பிறையும் புனலும் அரவும்  இடையினில் சுழல் புலிகச்சுவுந் தேயும் உடைநாதனை உருகி வணங்கிட வினையகலி சுடலையினில் மறுபடி விழுவது தவிருமே! சடையொடு ஓர் பிறையும் புனலும் அரவும்  இடையினில் சுழல் புலி கச்சுவுந் தேயும்  உடை நாதனை உருகி வணங்கிட வினை அகலி  சுடலையினில் மறுபடி விழுவது தவிருமே! புனல் –   கங்கை,    புலி கச்சு -   புலித்தோல் ஆடை அரவு –   பாம்பு,    அகலி –  நீங்கி,    விலகி,    சுழல் –  சுற்றிய,  சுடலை –  சுடுகாடு,    தேயு -  நெருப்பு,    தவிருமே -   விலகுமே பொழிப்புரை:-   சடையொடு ஓர் சந்திரனையும் நீரையும் (கங்கை)  இடுப்பில் அணிந்த புலிதோல் ஆடையும் நெருப்பும்  கொண்ட தலைவனை உருகி தொழுதிட வினை நீங்கி சுடுகாட்டில் மீண்டும் எரிக்கப் படுவது  விலக்கப்படுமே . ! கருத்துரை:-   திருமுடியில் செஞ்சடையொடு இளம்பிறையாகிய சந்திரனும், புனலாகிய கங்கையும், பாம்பும், இடைதனில் புலித்தோல் ஆடையும், திருக்கரங்களில் ஒன்றில் அக்கினியும் உடைய நாதத்தின் தலைவனாகிய அந்த சிவபரம்பொருளை உள்ளம் உருகி போற்றி புகழ்ந்து தொழுவார்க்கு மறுபடியும் பிறந்து இவ்வுலகில் அல்லல் பட்டு இறந்து சுடுகாடு சேர்ந்து எரியூட்டப்படு