Posts

Showing posts from June, 2021

விருபாட்சீச்சுரர் மாலை Virupatchechurar Malai

Image
  விருப்பாட்சீச்சுரர் மாலை அத்திமூர்- போளுர். சுவாமி   -    விருப்பாட்சீச்சுரர் அம்பாள் - பருவதவரத்தினி பண் - கொல்லி இராகம் - நவரோஸ் உ திருச்சிற்றம்பலம் ஆற்றி லேடெதிர்த்தானை ஆறங்க மானானை    அகிலபுவன நாயகனை அருவுருவமானானை கூற்றை யுதைத்தானை கொடிய முயலகனை மிதித்தானை    கோறிய பொற்கிழி தந்தானை கோள்களை படைத்தானை காற்றிலுயிரை வைத்தானை கனியமுது தந்து என்றுங்    காலடியில் வைத்தானை காசிபர் கைதொழுத அத்திமூர் வேற்கண் மங்கையாள் பருவதவர்த்தினி யுடனுறையும்    விருப்பாட்சீச்சுரனை தொழுதிட வினை மாளுமே! (1) ஆற்றில் ஏடு எதிர்த்தானை ஆறு அங்கம் ஆனானை    அகில புவன நாயகனை அரு உருவம் ஆனானை  கூற்றை உதைத்தானை கொடிய முயலகனை மிதித்தானை    கோறிய பொற்கிழி தந்தானை கோள்களை படைத்தானை  காற்றில் உயிரை வைத்தானை கனி அமுது தந்து என்றுங்    காலடியில் வைத்தானை காசிபர் கை தொழுத அத்திமூர்  வேற்கண் மங்கையாள் பருவதவர்த்தினி உடன் உறையும்     விருப்பாட்சீச்சுரனை தொழுதிட வினை மாளுமே!  ஆறு - வைகை,   பொற்கிழி - பொன் மூட்டை,  புவனம் - உலகம்,  கோள் - கிரகம்  அரு - உருவமற்ற,   கனி - மாங்கனி,  கூற்றை - இயமன்,  கோறிய - வேண்டிய, ஆறு

திருவடமூலநாதர் ThiruVadaMoolaNadhar

Image
 

வள்ளி கணவன் வாடா மலர் மாலை Valli Kanavan Vaada Malar Malai

Image
 

தென்பெண்ணேச்சுரர் மாலை ThenPennechurar Malai

Image
தென்பெண்ணேச்சுரர் மாலை பெண்ணேச்சுரமடம். சுவாமி -    தென்பெண்ணேச்சுரர் அம்பாள் - வேதநாயகி தலம்   -  பெண்ணேச்சுரமடம் . தீர்த்தம்    -       பெண்ணையாறு .        விருட்சம் -       பனை மரம். பண்:- கொல்லி     இராகம் - நவரோஸ் உ திருச்சிற்றம்பலம் மந்திர பொருளாகி மண் மேல் கலந்திருப்பானை    மறை நான்கினுட் பொருளாக யுறைந்திருப்பானை எந்தையுந் தாயுமாய் எவ்வுயிர்க்கு மிருப்பானை    ஏழிசையினிய நாதமாய் கலந்தானை வந்தனை செய்வோர்க்குரிய வானாடளிப்பானை    வண்டார்குழலாள் வேதநாயகியுடனுறையும் வெந்தநீறணியும் விமலனை தென்பெண்ணேச்சுரனை    வேண்டி தொழ வினை நீங்கி வாழ்வாரினிதே ! (1) மந்திர பொருள் ஆகி மண் மேல் கலந்து இருப்பானை    மறை நான்கின் உட்பொருளாக உறைந்து இருப்பானை எந்தையுந் தாயுமாய் எவ்வுயிர்க்கும் இருப்பானை    ஏழ் இசையின் இனிய நாதமாய் கலந்தானை வந்தனை செய்வோர்க்கு உரிய வான் நாடு அளிப்பானை    வண்டார் குழலாள் வேத நாயகியுடன் உறையும் வெந்த நீறு அணியும் விமலனை தென்பெண்ணேச்சுரனை    வேண்டி தொழ வினை நீங்கி வாழ்வார் இனிதே! எந்தை - தந்தை,   ஏழிசை - ச  ரி  க ம ப த நி   ஸ்வரங்கள்,  ஆர் - அழகு,   குழல் - கூந்தல்,  ம

அருணாசலேச்சுரர் மாலை Arunachalechurar Malai

Image