அனலில் ஓர் அற்புதஞ் செயவலரவரே புனலையுஞ் சுவற யருளைச் செய்வரீவது வினகில் ஞானமுங் கல்வியும் அறிவுந் தனமுந் தானியமுமேயென கருதிதொழுதிடுக ! அனலில் ஓர் அற்புதஞ் செய்வலர் அவரே புனலையுஞ் சுவற அருளைச் செய்வர் ஈவது வினகில் ஞானமுங் கல்வியும் அறிவுந் தனமுந் தானியமுமே என கருதி தொழுதிடுக ! அனல் - நெருப்பு, புனல் - நீர், சுவற - வற்றிட, வினகில் - கேட்பது பொழிப்புரை:- அனலில் ஒரு அற்புதஞ் செய்ய வல்லவர் அவரே நீரை வற்றிட அருளச் செய்வார் தருவது (எதுவென) கேட்பீராகில் (அது) ஞானமும், கல்வியும், அறிவும், தனமும், தானியமுமே என நினைந்து (அவரை)'தொழுதிடுக! கருத்துரை:- ஈசன் நெருப்பிலும், நீரிலும் பல அற்புதங்களை செய்ய வல்லவர். அவர் இவ்வுலக உயிர்களுக்கு தருவது எதுவென கேட்பீராகில் அது ஞானமும் கல்வியும் அறிவும் தனமும் தானியமும் ஆகும். ஆகையால் அவரை நினைந்து வழிபட்டு நற்கதியை அடையுங்கள்! திருத்தல பெருமை:- சுவாமி - கனககிரீச்சுரர். அம்பாள் - பெரிய நாயகி தலம் - திருதேவிகாபுரம் தீர்த்தம்...