புத்ரகாமேச்சுரர் PuthraKamechurar - 1

முத்தினையோர் மூலப் பொருளானானை பரமனை மித்ரனாய் சுந்தரரை மெச்சிய மாமேரு சித்ர கானாம்ருத அரனை ! சதாசிவனை ! தொழ புத்ர பாக்கியமொடு பல புகழுந் தருவானே! முத்தினை ஓர் மூலப் பொருளாய் ஆனானை பரமனை மித்ரனாய் சுந்தரரை மெச்சிய மாமேரு சித்ர கான அம்ருத அரனை சதாசிவனை தொழ பு த்ர பாக்கியமொடு பல புகழுந் தருவானே! மித்ரன் - நண்பன், அம்ருதம் - அமுதம், மேரு - மேருமலை , சித்ரம் - அழகு , கானம் - இசை பொழிப்புரை:– முத்திக்கு ஒரு மூலப் பொருளாய் ஆனவனை பரமனை, நண்பனாகச் சுந்தரரை ஆட்கொண்ட மகாமேருமலையான அழகு மிகுந்த இசையமுதமாகிய ஈசனை, சதாசிவனை வணங்க புத்திர பாக்கியமொடு பல புகழுந் தருவானே! கருத்துரை:- முத்தி தரும் மூல போருளாக இருப்பவனை பரமேச்சுரனை, அன்று நண்பனாக வந்து சுந்தரமூர்த்தி நாயனாரை ஆட்கொண்டவனை, மேரு மலையளவுக்கு உயர்ந்த புகழை உடையவனை, அழகு மிக்க இசையெனும் அமுதமாய் திகழும் சிவனின் 64 - திருமூர்த்தங்களில் ஒன்றான சதாசிவமூர்த்தி எனுந் திருநாமங் கொண்டவனை வணங்கிட புத்ர பாக்கியமும் பல வகையான புகழும் தந்தருள்வானே ! திருத...