ஏகாம்பரேச்சுரர் Ekambarechurar

ஆற்றினை யோர்பாகம் வைத்து அங் காரஞ்சூடி நீற்றினை சுத்தமொடு நச்சி டுவரே கூற்றைப் பற்றுதைத்தம் மானிக் குகந்தவர் காற்றுமானவர் அவரை ஏத்த வினையறுமே! ஆற்றினை ஓர் பாகம் வைத்து அங்கு ஆரஞ் சூடி நீற்றினை சுத்தமொடு நச்சி இடுவரே கூற்றைப் பற்றி உதைத்து அம்மானிக்கு உகந்தவர் காற்றும் ஆனவர் அவரை எந்த வினை அறுமே! ஆற்றினை - கங்கையை, கூற்று - இயமன் , ஆரஞ் - கொன்றை மாலை, மானி- மார்கண்டேயர், நீற்றினை - திருநீறு, உகந்தவர் - அருளியவர், நச்சி - விரும்பி, ஏத்த - போற்றி, வணங்கி. பொழிப்புரை:- கங்கையை ஒரு புறம் வைத்து அங்கு மாலையும் தரித்து திருநீற்றை தூய்மையொடு விரும்பி அணிபவரே இயமனை பிடித்து உதைத்து அந்த மார்கண்டேயருக்கு பொருத்தமானதை தந்தவர் காற்றாகவும் இருப்பார் அவரை (ஈசனை) வணங்க வினை நீங்குமே! கருத்துரை:- கங்கையை தன் சடை முடியில் ஒரு புறமாக வைத்தும், அங்கே கொன்றை மாலையை சூடியும், தூய்மையான திருநீற்றை விரும்பி திருமேனி எங்கும் தரித்து கொண்டிருப்பவரும், இயமனை பிடித்து காலால் உதைத்து தள்ளியவரும், அந்த பக்தரான மார...