மல்லிகார்ச்சுனர் Malligarchunar

அல்லிமலர் அகவிதழி லுறையு மானந்தனை சில்லில் சுழலாத பொற்ச்சோதி சீர் கல்லில் காணுமிறையை வலிவாதம் வாதிப்பானை சொல்லில் பொருளுமுடை பரமனை சென்று காணீர்! அல்லி மலர் அக இதழில் உறையும் ஆனந்தனை சில்லில் சுழலாத பொற்ச் சோதி சீர் கல்லில் காணும் இறையை வலி வாதம் வாதிப்பானை சொல்லில் பொருளும் உடை பரமனை சென்று காணீர்!. அகம் - உள்ளே, சில் - வட்ட வடிவான கருவி, சக்கரம், வலி - வலிமை, சீர் - அழகு, வாதிப்பது - அறுப்பது, வாதம் - நோய். பொழிப்புரை:- அல்லி மலரின் உள் இதழில் உறையும் ஆனந்தமயமானவனை, (கால) சக்ரத்தில் சுழலாத பொன்னிற சோதி (ஆன) அழகிய கல்லில் காணும் இறைவனை வலி வாதம் (நோயை) அறுப்பானை, சொல்லின் பொருளாக உடைய பரமேச்சுரனை சென்று காண்பீர்! கருத்துரை:- அல்லி மலர் இதழின் உள்ளே வாசஞ் செய்யும் ஆனந்தமயமான சிவனை, கால சக்ரத்தில் சுழலாத பொன் போன்று ஒளி வீசிப் பிரகாசிக்கும் சுடர் போன்றவனை, இடம், காலத்தைக் கடந்தவனை, கல்லில் காணுகின்ற அழகு மிக்க வடிவமாகிய இறைவனை, வலிமை மிக்க வாதம் எனும் நோயை அறுத்து நீக...