Posts

Showing posts from April, 2016

தென்பெண்ணேச்சுரர் ThenPennechurar

Image
மன்றுள் ஓர் மாணிக்கமாய் உறை பரனே நன்றுடையார் சுருதி மொழி மெச்சு மண்ணே  கன்று உண்டப் பாலைப் பெருக செய்வனே யென வென்று வினையை வளம்பல தெளிந்து வாழ்வீரே! மன்றுள் ஒர் மாணிக்கமாய் உறை பரனே நன்று உடையார் சுருதி மொழி மெச்சும் அண்ணே கன்று உண்டப் பாலைப் பெருக செய்வனே என  வென்று வினையை வளம் பல தெளிந்து வாழ்வீரே! மன்று -  பொற்சபை,   தெளிந்து -  செழித்து,  உறை -  வசிக்கும்,  குடி கொண்ட,    சுருதி -  வேதம்,  இசை வளம் -  செழுமை,    அண்ணே -  பெருமைமிகு தலைவர். பொழிப்புரை:- பொற்சபையில் ஒரு மாணிக்கமாய் வாழும் பரம்பொருளே, நன்மை உடையவர்களின் வேத மொழிகளை விரும்பும்  தலைவரே, கன்று உண்ட பாலை பெருகச் செய்வோனே என (போற்ற) வினைகளை வென்று வளங்கள் பலவும் பெற்று செழித்து வாழ்வீரே! கருத்துரை:- பொற்சபையில் ஒரு மாணிக்கமாய் வாழும் பரம்பொருளே,  நன்மை உடையவர்களின் வேத மொழிகளை விரும்பும் பெருமைமிகு தலைவரே, கன்று உண்டப் பின் பாலை கருணையோடு  சுரந்து  பெருக  செய்கின்றவனே என போற்றுபவர்கள்,  சிவபெருமானின் அருளால் வி...

அயிராவதேச்சுரர் Ayiravathechurar

Image
மருந்துசேர் மருந்தினை மாலய னரனான பெருந்சோதி சுயம்புவை முச்சுடரை தேவனை அருவ வுருவனை புராந்தகனை தொழ இருமையிலு மினிமறுமையிலும் அவனருள் கூடுமே! மருந்து சேர் மருந்தினை மால் அயன் அரன் ஆன பெரும் சோதி சுயம்புவை முச் சு டரை தேவனை அருவ உருவனை புராந்தகனை தொழ இருமையிலும் இனி மறுமையிலும் அவன் அருள் கூடுமே! மருந்து  –   மூலிகை,   இருமை -  இப்பிறவி, மறுமை –  விண்ணுலகு,   சேர் -  கலந்த, மருந்து  –   சிவன்,   சுயம்பு -  தானாய் தோன்றிய, முச்சுடர் -  மூன்று ஒளி (சூரியன்,  சந்திரன்,  அக்கினி) அருவம் -   புலப்படாத.       பொழிப்புரை:- மூலிகை கலந்த மருந்தைத் திருமால் பிரம்மன் ருத்ரன் ஆகிய  பெருஞ்சுடரை தானாய் தோன்றியவனை மூன்று ஒளியை தேவனை புலப்படாத வடிவனை முப்புரங்களுக்கு இயமனை வணங்க  இப்பிறவியிலும் இனி விண்ணுலகிலும் அவன் (ஈசன்) அருள் சேருமே! கருத்துரை:-   பல மூலிகைகளை ஒன்று சேர்த்து உருவாக்கிய கலவை ஆகிய மருந்தாக இருந்து நோய்களைக் குணபடுத்தும் ஓர் அறிய பரிகார பொருளைப் போலத் திகழ்பவனை, திருமால்...