தென்பெண்ணேச்சுரர் ThenPennechurar

மன்றுள் ஓர் மாணிக்கமாய் உறை பரனே நன்றுடையார் சுருதி மொழி மெச்சு மண்ணே கன்று உண்டப் பாலைப் பெருக செய்வனே யென வென்று வினையை வளம்பல தெளிந்து வாழ்வீரே! மன்றுள் ஒர் மாணிக்கமாய் உறை பரனே நன்று உடையார் சுருதி மொழி மெச்சும் அண்ணே கன்று உண்டப் பாலைப் பெருக செய்வனே என வென்று வினையை வளம் பல தெளிந்து வாழ்வீரே! மன்று - பொற்சபை, தெளிந்து - செழித்து, உறை - வசிக்கும், குடி கொண்ட, சுருதி - வேதம், இசை வளம் - செழுமை, அண்ணே - பெருமைமிகு தலைவர். பொழிப்புரை:- பொற்சபையில் ஒரு மாணிக்கமாய் வாழும் பரம்பொருளே, நன்மை உடையவர்களின் வேத மொழிகளை விரும்பும் தலைவரே, கன்று உண்ட பாலை பெருகச் செய்வோனே என (போற்ற) வினைகளை வென்று வளங்கள் பலவும் பெற்று செழித்து வாழ்வீரே! கருத்துரை:- பொற்சபையில் ஒரு மாணிக்கமாய் வாழும் பரம்பொருளே, நன்மை உடையவர்களின் வேத மொழிகளை விரும்பும் பெருமைமிகு தலைவரே, கன்று உண்டப் பின் பாலை கருணையோடு சுரந்து பெருக செய்கின்றவனே என போற்றுபவர்கள், சிவபெருமானின் அருளால் வி...