சுந்தரநடராசர் SundaraNataRasar

திருமறை யோர் புகழ சடைவீசி பொற்சபையி லொரு கால்பராவி யாடும் நடராசனை நும் இருகரங் கூப்பித் தலையால் வணங்க வருந்துயரகன்று வாழ்வு சுபீட்சமடையும்! திரு மறையோர் புகழ சடை வீசி பொற்சபையில் ஒரு கால் பராவி ஆடும் நடராசனை நும் இரு கரங் கூப்பித் தலையால் வணங்க வருந் துயர் அகன்று வாழ்வு சுபீட்சம் அடையும்! மறை - வேதங்கள், பராவி - விரிவாக எங்கும் நிறைந்து, கூப்பி – சேர்த்து, சுபீட்சம் – ஷேமம், நன்மை, செழிப்பு. பொழிப்புரை:- வேத நெறி அந்தணர்கள் புகழ சடை வீசி பொற்சபையில் ஒரு காலை எங்கும் நிறைத்து ஆடும் நடராசனை உங்கள் இரு கரங்களை கூப்பி தலையால் வணங்க வருகின்ற துயரம் நீங்கி வாழ்வு வளம் அடையும்! கருத்துரை:- வேதம் ஓதும் அந்தணர்கள் போற்றி புகழ, சடையை விசி பொன்னம்பலத்தில் எங்கும் நிறைத்து ஆடுகின்ற நடராச பெருமானை உங்கள் இருகைகளைக் கொண்டு கூப்பித் தலையால் வணங்க, வருகின்ற துயரங்கள் எல்லாம் நீங்கி வாழ்வும் செழிப்பு அடையும்.! திருத்தல பெருமை:- சுவாமி - சுந்தர நடராசர் அம்பாள்...