நீலகண்டேச்சுரர் Neelakandechurar

ஆலமுண்டார் யறிந்தருள் செய்வா ரவர் கோலமொடுச் சுற்றிவர இச்சைகொண்டே ஞாலமு மண்டமிரவு பகல் செய்தாரவரைச் சீலமொடிருத்தி துதித்து நீர் வாழ்வீரினிதே! ஆலம் உண்டார் அறிந்து அருள் செய்வார், அவர் கோல மொடுச் சுற்றி வர இச்சை கொண்டே ஞாலமும் அண்டம் இரவு பகல் செய்தார் அவரைச் சீலமொடு இருத்தி துதித்து நீர் வாழ்வீர் இனிதே! ஆலம் - ஆலகால விஷம், இச்சை - விருப்பம், ஞாலம் - உலகம், அண்டம் - ஆகாயம், வெட்ட வெளி, சீலம் - நற்குணம். பொழிப்புரை:- ஆலகால விஷமுண்டார் அறிந்து அருள் செய்வார், அவர் கோலங்கள் கொண்டு (உலகை) சுற்றிவர இச்சை கொண்டே உலகம், அண்டம், இரவு பகல் படைத்தார், அவரை நற்குணங்களொடு (மனதில்) இருத்தி துதித்து நீங்கள் இனிமையாக வாழ்வீர்கள்! கருத்துரை: - அன்று ஆலகால விஷத்தை உண்ட சிவபெருமான் தன் அடியார்களுக்கு எது எப்போது எப்படி அருள் புரிய வேண்டும் என அறிந்து அப்படி அருள் செய்வார். அவர் பல வேடங்களைக் கொண்டு இப்பூவுலகில் சுற்றிவர விருப்பங் கொண்டே உலகமும் அண்டமும் (ஆகாயம்) இரவும், பகலும் உண்டாக்கினார் அவரை நல்ல உயர்ந்த குணங்களொடு உள்ளத்தில் இரு...