ஓணகாந்தீச்சுரர் OnaKanthechurar

சேவதேறியோர் சூலமுந் தாங்கிய பரமாய் நாவதிலுறை சுகானுபவ அச்சிவத் தீயே ஆவணந் தானவைமுன் காட்டி அடிமையாய் பாவணம் பாடவைத்தா னவனைஓதி உய்வடைவீர்! சேவு அது ஏறி ஓர் சூலமுந் தாங்கிய பரமாய் நாவு அதில் உறை சுக அனுபவ அச்சிவத் தீயே ஆவணந்தான் அவை முன் காட்டி அடிமையாய் பாவணம் பாட வைத்தான் அவனை ஓதி உய்வு அடைவீர்! சேவு - எருது, பரமாய் - பரம் பொருளாய், சுகானுபவம் - இனிய அனுபலம், ஆவணம் - அடிமை பத்திரம், பாவணம் - தேவாரம். பொழிப்புரை:- எருது ஏறி ஒரு சூலம் ஏந்திய பரம் பொருளாய் நாவில் உறைகின்ற இனிய அனுபவமாகிய அந்த சிவத் தீயே ஆவணத்தை சபை முன் காட்டி அடிமை கொண்டு (தேவார) பாடல்களை பாட வைத்தான், அவனை பாடி நற்கதி அடைவீர்! கருத்துரை:- எருதாகிய ரிஷபத்தின் மேல் ஏறி ஒரு கையில் சூலமும் தாங்கி சிவபரம் பொருளாய் அடியார்கள் நாவில் உறைகின்ற அந்த பேரானந்த அனுபவமாகிய சிவ ஒளியே, அன்று சுந்தர மூர்த்தி சுவாமிகளின் திருமணத்தின் போது சபையோர் நடுவே அடிமை ஓலையை (ஆவண பத்திரம்) காட்டி அவரை அடிமை கொண்டு சிறந்த நயமிக்க பாக்களாகிய தேவாரத்தை பாட வைத்த...