Posts

Showing posts from October, 2016

ஓணகாந்தீச்சுரர் OnaKanthechurar

Image
சேவதேறியோர் சூலமுந் தாங்கிய பரமாய் நாவதிலுறை சுகானுபவ அச்சிவத் தீயே ஆவணந் தானவைமுன் காட்டி அடிமையாய் பாவணம் பாடவைத்தா னவனைஓதி உய்வடைவீர்! சேவு அது ஏறி ஓர் சூலமுந் தாங்கிய பரமாய்  நாவு அதில் உறை சுக அனுபவ அச்சிவத் தீயே  ஆவணந்தான் அவை முன் காட்டி அடிமையாய்  பாவணம் பாட வைத்தான் அவனை ஓதி உய்வு அடைவீர்! சேவு - எருது,    பரமாய் - பரம் பொருளாய்,  சுகானுபவம் - இனிய அனுபலம்,  ஆவணம் - அடிமை  பத்திரம்,   பாவணம் - தேவாரம். பொழிப்புரை:- எருது ஏறி ஒரு சூலம் ஏந்திய பரம் பொருளாய் நாவில் உறைகின்ற இனிய அனுபவமாகிய அந்த சிவத் தீயே ஆவணத்தை சபை முன் காட்டி அடிமை கொண்டு (தேவார) பாடல்களை பாட வைத்தான்,  அவனை பாடி நற்கதி அடைவீர்! கருத்துரை:-  எருதாகிய ரிஷபத்தின் மேல் ஏறி ஒரு கையில் சூலமும்  தாங்கி சிவபரம் பொருளாய் அடியார்கள் நாவில் உறைகின்ற அந்த பேரானந்த அனுபவமாகிய சிவ ஒளியே, அன்று சுந்தர  மூர்த்தி சுவாமிகளின் திருமணத்தின் போது சபையோர் நடுவே அடிமை ஓலையை (ஆவண பத்திரம்) காட்டி அவரை அடிமை கொண்டு சிறந்த நயமிக்க பாக்களாகிய தேவாரத்தை பாட வைத்த...

மாசிலாமணீச்சுரர் MasilaManeechurar

Image
பூசிநீறை பார்புகழ வெள்ளேறேறி நாரணியொடு வீசியாடு சுவலில் தாழ்ச்சடை யணீசனே! மாசி மகத்தில் உலாவரும் மறையவனே ! வாசிதீர வளமுடன்வாழ மாகருணை புரிவீரே ! பூசி நீறை பார் புகழ வெள்ள ஏறு ஏறி நாரணியொடு வீசியாடு சுவலில் தாழ்ச் சடை அணி ஈசனே!  மாசி மகத்தில் உலா வரும் மறையவனே !  வாசி தீர வளமுடன் வாழ மா கருணை புரிவீரே ! ஏறு - ரிஷபம்,   சுவல் – தோள்,   வாசி – குற்றம்,  வேறுபாடு,  தாழ்சடை – தாழ்ந்து படர்ந்த சடை,   நாரணி - உமையவள் பொழிப்புரை:- திருநீற்றை பூசி உலகம் புகழ வெள்ளை எருது ஏறி நாரணியொடு தோளில் வீசி ஆடுகின்ற தாழ்சடை அணிந்த ஈசனே ! மாசி மகத்தில் உலா வரும் வேத முதல்வனே ! குற்றம்  இல்லாது வளமுடன் வாழ பெருங் கருணை புரிவீரே !   கருத்துரை:-  திருநீற்றை திருமேனி எங்கும் பூசி உலகம் புகழ உமா தேவியோடு வெள்ளை எருது ஏறி  செஞ்சடை யானது திருத் தோளில் தவழும்படி அணிந்து,   எங்கும் நிறைத்து திருநடனம் ஆடுகின்ற ஈசனே! மாசி மாதத்தில் மக நட்சரத்தில் ரிஷப வாகனத்தில் வலம் வருகின்ற வேத நாயகனே!   அடியேன் குற்றங்கள் எல்லாம் தீர்ந்து ...