சலகண்டேச்சுரர் Salakandechurar

கலந்த தோர் கருவில் உயிரும் பரந்து பல நாளுஞ் சுற்றி முற்றிச் சுருண்டே உலகு கண்டு உருவங்கள் மாறி யழியாமல் நலந்தரும் நிமலாயுன் சபையின் கண்வைக! கலந்தது ஓர் கருவில் உயிரும் பரந்து பல நாளுஞ் சுற்றி முற்றிச் சுருண்டே உலகு கண்டு உருவங்கள் மாறி அழியாமல் நலந் தரும் நிமலா உன் சபையின் கண் வைக! பரந்து - விசாலமான விரிந்த, வியாபித்து, சபை - திருச்சபை, திருவடி நிமலன் - சிவன். பொழிப்புரை:- சேர்ந்த ஒரு கர்பத்தில் இவ்வுயிரானது வியாபித்து பல நாட்கள் சுழன்று முதிர்ச்சி அடைந்து சுருண்டு (பின்) பூமியைக் கண்டு (தன்) வடிவங்கள் மாற்ற மடைந்து அழிந்து போகாமல் நன்மைகள் அருளும் சிவனே உனது திருச்சபையில் வைத்திடுக! கருத்துரை - இவ்வுயிரானது ஒரு தாயின் கர்பத்தில் சேர்ந்து விசாலமாய் முன்னூறு நாட்கள் தங்கி அங்கே மேலுங் கீழுமாய் சுழன்று முதிர்ச்சி அடைந்து,சுருண்டு பின் வெளியே வந்து இம்மண்ணுலகை காண்கிறது. அதன் பிறகு அது மழலை பருவம். பால பருவம், வாலிப பருவம், முதுமை பருவம் என பல வடிவங்களாக மாற்றம் அடைந்து இறுதியில் அழிந்து போகிறது. நன்மைகள் அருளும் சிவபரம் பொருளே இ...