Posts

Showing posts from April, 2021

குலைவணங்கீசர் KulaiVanangeesar

Image
 

தென்பெண்ணேச்சுரர் ThenPennechurar 2

Image
  அன்றாலமர் அண்ணலை ஆதியான அரனை சென்று தொழுது சுற்றி உருகிச் செங்கணே! என்று கொண்டாடி அருளை பெறாமலழி வேனோயுன் துன்று பொற் கழல் சேர்வ தெக்கால மறியேனே! அன்று ஆல் அமர் அண்ணலை ஆதியான அரனை சென்று தொழுது சுற்றி உருகிச் செங்கணே! என்று கொண்டாடி அருளை பெறாமல் அழிவேனோ உன்  துன்று பொற் கழல் சேர்வது எக்காலம் அறியேனே! அண்ணல் :-  வணங்க தக்க,   ஆதி –  மூலம்,  முழுமுதல்,   அரன் –  சிவன்,  செங்கணே -  சிவந்த கண்,   துன்று -  ஒன்று சேர்ந்த,   கழல்  - திருவடி பொழிப்புரை:- அன்று ஆல மரம் (கீழ்) அமர்ந்த வணங்க தகுந்தவனை மூலமாகிய சிவனை  சென்று வணங்கி வலம் வந்து உருகிச் சிவந்த கண்களையுடையவனே  என்று புகழ்ந்து அருளை பெறாமல்  அழிவேனோ  உனது ஒன்றாக சேர்ந்த பொன்னார் திருவடியை சேர்வது எப்பொழுது (என்று) அறியேனே!  கருத்துரை:-  அன்று ஆலமரங் கீழே அமர்ந்து சனகாதிய முனிவர்களான சனகர், சனந்தனர், சனாதனர், சனற் குமாரர் எனும் நால்வருக்கு உபதேசித்தருளிய வணங்குவதற்குரிய இறைவனாக மூல முழுமுதற் பொருளாய் திகழ்பவனை சென்ற...

திருவட்டீச்சுரர் மாலை Thiruvateechurar Malai

Image
திருவட்டீச்சுரர் மாலை    ThiruVateechurar Malai   [ Blog ]        [ PDF ]

இரத்தினகிரி வாழ் பாலமுருகன் இரத்தின மாலை விரிவுரை Rathinagiri Vazh Balamurugan RathinaMalai ViriUrai

Image
  இரத்தினகிரி வாழ்  பாலமுருகன்  இரத்தினமாலை  விரிவுரை Rathinagiri Vazh Balamurugan RathinaMalai ViriUrai       இரத்தினகிரி வாழ் பாலமுருகன் இரத்தினமாலை

வில்வவனேச்சுரர் VilvaVanechurar

Image
 

சிவகிரிநாதேச்சுரர் மாலை விரிவுரை SivagiriNathechurar Malai ViriUrai

உ திருச்சிற்றம்பலம் அருள்மிகு சிவகிரிநாதேச்சுரர் மாலை சுவாமி    –     சிவகிரிநாதர். அம்பாள் –    இளங்கிளி மொழியாள் . விருட்சம்  –     பவழ மல்லி. தீர்த்தம்    –    சரவண பொய்கை,  சிவகிரி தீர்த்தம்.    காலங்கள் பல நகரச் செய்தானை தன்னை நிதங்    கண்குளிர காண்பாரைக் காட்டுவித்தானை கோலங்கள் பலக் கொண்டு கோரினார்க்கருளிட    குறுகியே சென்றானை கோமகனு மருச்சித்த ஆலமுமத்தியு மடர்ந்திடும் ஈசன் மலையில்    அழகொளிருமிளங்கிளி மொழியாளுடன் வந்த சீலனைச் சித்தனை சிவகிரி நாதேச்சுரனை    சிந்தித்து வணங்கிட யவனியிலினிதிருப்பீர் ! (1) காலங்கள் பலநகரச் செய்தானை தன்னை நிதங்    கண்குளிர காண்பாரைக் காட்டு வித்தானை  கோலங்கள் பலக் கொண்டு கோறினார்க்கு அருளிட    குறுகியே சென்றானை கோமகனும் அருச்சித்த  ஆலமும் அத்தியும் அடர்ந்திடும் ஈசன் மலையில்    அழகு ஒளிரும் இளங்கிளி மொழியாள் உடன் வந்த  சீலனைச் சித்தனை சிவகிரி நாதேச்சுரனைச்     சிந்தித்து வணங்...