அன்றாலமர் அண்ணலை ஆதியான அரனை சென்று தொழுது சுற்றி உருகிச் செங்கணே! என்று கொண்டாடி அருளை பெறாமலழி வேனோயுன் துன்று பொற் கழல் சேர்வ தெக்கால மறியேனே! அன்று ஆல் அமர் அண்ணலை ஆதியான அரனை சென்று தொழுது சுற்றி உருகிச் செங்கணே! என்று கொண்டாடி அருளை பெறாமல் அழிவேனோ உன் துன்று பொற் கழல் சேர்வது எக்காலம் அறியேனே! அண்ணல் :- வணங்க தக்க, ஆதி – மூலம், முழுமுதல், அரன் – சிவன், செங்கணே - சிவந்த கண், துன்று - ஒன்று சேர்ந்த, கழல் - திருவடி பொழிப்புரை:- அன்று ஆல மரம் (கீழ்) அமர்ந்த வணங்க தகுந்தவனை மூலமாகிய சிவனை சென்று வணங்கி வலம் வந்து உருகிச் சிவந்த கண்களையுடையவனே என்று புகழ்ந்து அருளை பெறாமல் அழிவேனோ உனது ஒன்றாக சேர்ந்த பொன்னார் திருவடியை சேர்வது எப்பொழுது (என்று) அறியேனே! கருத்துரை:- அன்று ஆலமரங் கீழே அமர்ந்து சனகாதிய முனிவர்களான சனகர், சனந்தனர், சனாதனர், சனற் குமாரர் எனும் நால்வருக்கு உபதேசித்தருளிய வணங்குவதற்குரிய இறைவனாக மூல முழுமுதற் பொருளாய் திகழ்பவனை சென்ற...