Posts

Showing posts from December, 2016

வேதாரண்யேச்சுரர் Vedharanyechurar

Image
  பாதாரமே ஓர் துணை யென்றிருந்தே னரனே நீதான் வருஞ்சுமையை நீக்கச்செய் வையேயு னோதா உண்மையை உளுணர வைத்த ஒளியே நீயே ஆதாரமாய் அடியேனுக்கு வேண்டியதை தருக ! பாதாரமே ஓர் துணை என்று இருந்தேன் அரனே ! நீதான் வருஞ் சுமையை நீக்கச் செய்வையே உன் ஓதா உண்மையை உள் உணர வைத்த ஒளியே நீயே  ஆதாரமாய் அடியேனுக்கு வேண்டியதை தருக!  பொழிப்புரை:- திருவடியே ஒரு துணை என்று இருந்தேனே சிவனே,  நீதான் வருகின்ற சுமையை நீக்கச் செய்வாயே,  உன்னுடைய ஓதா (சொல்லமுடியாத) உண்மையை உள்ளே உணர வைத்த ஒளியே,  நீயே  ஆதாரமாய் அடியேனுக்கு வேண்டியதை தருக! கருத்துரை -   சிவனே! நீ தான் வருகின்ற துயரங்களையும், சுமைகளையும் நீக்க வல்லவன் ஆயிற்றே என்று உனது. திருவடியே எனக்கு ஒரு துணை என்று எண்ணி இருந்தேனே ! வாக்கினால் சொல்ல முடியாத உனது மெய்பொருள் தன்மையை எனது உள்ளத்தினுள்ளே உணர வைத்த  ஒளியே !  நீயே எனக்கு ஆதாரமாக இருந்து வேண்டியதெல்லாம் திருவருள் செய்வாயாக !  பரதாரம் - திருவடி,  ஓதா - சொல்ல முடியாத,   உண்மை - மெய்பொருள், உள் - உள்ளம் திருத்தல பெருமை:-   சுவாமி  -...

ஆதிகும்பேச்சுரர் Athikumbechurar

Image
வேதியனை யோர் விடையேறிய காரிய காரணனை மாதினை மெச்சுமோர் மணியைச் செல்வ பேறை ஓதியும் மறையை நன்கு உணரச் செய்தானை பாதிமதி சூடியவனை தொழ ஆவதெலாம் நலமே ! வேதியனை ஓர் விடை ஏறிய காரிய காரணனை  மாதினை மெச்சும் ஓர் மணியைச் செல்வ பேறை ஓதியும் மறையை நன்கு உணரச் செய்தானை பாதிமதி சூடியவனை தொழ  ஆவது எலாம் நலமே ! வேதியன் - வேதப்பொருளானவன்,  விடை - எருது ,  ரிஷிபம்,   மாது - உமையம்மை,   பேறை - உயர்ந்த,  மேன்மை, பயன்,   மறை - வேதம் பொழிப்புரை -  வேதம் உரைத்தவனை ஒரு எருது ஏறிய காரிய காரணமானவனை, உமையம்மையை விரும்பும் ஒரு மணியை,  செல்வத்தின் பயனை, மறையை ஓதி நன்றாக உணரச் செய்தவனை, பிறை சந்திரனை சூடியவனை துதிக்க நடப்பதெல்லாம் நன்மையே ! கருத்துரை:-   அன்று ஆல மரத்தின் கீழ் சனகாதி முனிவர்கள் நால்வருக்கும் வேதங்களை உபதேசித்தவனை, எங்கும் ரிஷப வாகனம் ஏறிச் செல்பவனை, எல்லா செயல்களுக்கும் காரணமாகவும் கர்த்தாகவும் இருப்பவனை,  உமா தேவியை விரும்பும் மணி போன்றவனை, செல்வத்தின் பயனாக இருப்பவனை,  தேவர்களும், முனிவர்களும், தன் அடியார்களும் நன்றாக...

மாத்ருபூதேச்சுரர் Mathruboothechurar

Image
செகத்தி லோர் தாயுமாய் வந்தானை பரவிய யுகத்தின் சுழற்ச்சியைச் செயுந் தேனை அகப்பூவி லுறையு மருமருந்தை பணிய மகத்தில் புகுஞ்சனியும் மாறி நன்மை செயுமே ! செகத்தில் ஓர் தாயுமாய் வந்தானை பரவிய  யுகத்தின் சுழற்ச்சியைச் செயுந் தேனை  அகப்பூவில் உறையும் அரு மருந்தை பணிய  மகத்தில் புகுஞ் சனியும் மாறி நன்மை செயுமே ! பொழிப்புரை:- பூவுலகில் ஒரு தாயுமாகி வந்தவனை,  பரந்த யுகத்தின் சுழற்ச்சியைச் செய்யும் தேனை, உளம் (எனும்)  பூவில் உறைகின்ற அரிய மருந்தை வணங்க மகத்தில் ( நட்சத்திரம்) புகுந்த சனி கிரகமும் நன்மை செய்யுமே!.  கருத்துரை :-  இப்பூவுலகில் துணையிலா ஒரு வணிக குலப் பெண்ணின் பிரசவ காலத்தில், எல்லாம் வல்ல பரம்பொருளாகிய சிவனை தனக்கு துணையாக இருக்கும்படி வேண்டிக் கொள்ள ஈசனும் அப்பெண்ணின் தாயைப் போலவே உருமாறி வந்து பிரசவம் பார்த்தானை,  பரந்து விரிந்துள்ள இந்த யுகத்தின் செயல்பாடுகளை செய்யும் தேன் போன்று இனிப்பவனை, உள்ளம் எனும் பூவில் உறைகின்ற அரிய மருந்தாய் இருப்பவனை வணங்கி தொழுதால் மக நட்சத்திரத்தில் புகுந்த சனி கிரகமும் நன்மையே செய்யும்.. மக நட்சத்திரமானது  ...