வேதாரண்யேச்சுரர் Vedharanyechurar

பாதாரமே ஓர் துணை யென்றிருந்தே னரனே நீதான் வருஞ்சுமையை நீக்கச்செய் வையேயு னோதா உண்மையை உளுணர வைத்த ஒளியே நீயே ஆதாரமாய் அடியேனுக்கு வேண்டியதை தருக ! பாதாரமே ஓர் துணை என்று இருந்தேன் அரனே ! நீதான் வருஞ் சுமையை நீக்கச் செய்வையே உன் ஓதா உண்மையை உள் உணர வைத்த ஒளியே நீயே ஆதாரமாய் அடியேனுக்கு வேண்டியதை தருக! பொழிப்புரை:- திருவடியே ஒரு துணை என்று இருந்தேனே சிவனே, நீதான் வருகின்ற சுமையை நீக்கச் செய்வாயே, உன்னுடைய ஓதா (சொல்லமுடியாத) உண்மையை உள்ளே உணர வைத்த ஒளியே, நீயே ஆதாரமாய் அடியேனுக்கு வேண்டியதை தருக! கருத்துரை - சிவனே! நீ தான் வருகின்ற துயரங்களையும், சுமைகளையும் நீக்க வல்லவன் ஆயிற்றே என்று உனது. திருவடியே எனக்கு ஒரு துணை என்று எண்ணி இருந்தேனே ! வாக்கினால் சொல்ல முடியாத உனது மெய்பொருள் தன்மையை எனது உள்ளத்தினுள்ளே உணர வைத்த ஒளியே ! நீயே எனக்கு ஆதாரமாக இருந்து வேண்டியதெல்லாம் திருவருள் செய்வாயாக ! பரதாரம் - திருவடி, ஓதா - சொல்ல முடியாத, உண்மை - மெய்பொருள், உள் - உள்ளம் திருத்தல பெருமை:- சுவாமி -...