வள்ளி மணாளன் அட்சரமாலை மூலம் Valli Manalan Atcharamalai Moolam




வள்ளி மணாளன் அட்சர மாலை


பள்ளியிலுறையும் பிள்ளாய் பணிந்தேனுனையே வலமாய்
புள்ளி மயிலேறி புவனமதை நொடியில் வலமாய் வந்த
வள்ளி மணாளன் அட்சர மாலையையோதியுய்ந்திடயெமக்கு
அள்ளி தாரும் ஞானமும் சொல்லும் நல்லபடியே.

அகர உகர மகர வடிவாகிய சோதியே வள்ளிமணாளனே!
சிகரயுருவாய் நின்ற சூரனை சேவலும் மயிலுமாய்
தகரயயிலை கடாவி வசமாக்கி தனி பேற்றை யருளிய
புகர புங்கவ! காவாய் பொன்னொளிர் ஆதியே. 1

ஆதி முதனாளிலரனார் நுதலிலுதித்த வள்ளிமணாளனே!
மேதினியிலிது தகுமோ யெமை நோக்காதிருத்தல்
போதியாயினி யோர் சொற்புனிதா! குமரா! நீயும்
சோதியாய் தோன்றி காவாயினி மூத்த இபமுடனே. 2

இபமா மடந்தையை புணர்யெழில்மிகு வள்ளிமணாளனே! 
யெமை
கபடாகிய சூதும் வாதும்யென்றும் நாடாது நலியாது
சுபஞான சொற்குமரா! சுடரொளிர் சுப்பிரமணியா! யானு
மபயமுந்தன் பொற்பாதமே தீராயெந்தன் ஈனமே. 3

ஈனமிகுத்தப் பிறவியினி சூழாதறுக்கும் வள்ளிமணாளனே!
ஏனமும் கொம்பும் விருப்போடு மணியு மீசன் மகனே!
தானமுந் தவமுமியற்றிடயடியேன் பாலென்றும்
ஊனமும் பிணியுமூடாது காவாயினி உய்யவே. 4

உய்ய ஞானத்து சிவபோதமதை யருளாய் வள்ளிமணாளனே!
பொய்யுருவாகிய புலால் குரம்பையைக் கொண்டடியேன்
மெய்யுருவென்று நம்பி மேதினியில் வீணேயுழன்
றய்யுறுவேனோ! நீயும் புகுவாயெந்தன் ஊனத்தசைக்குள்ளே. 5

ஊனத்தசைக்குள்ளேயொன்பது வாசலிட்ட வள்ளி மணாளனே!நீயும்
ஈனனெனையேனென்று கேட்காதிருப்பது தானேனோ? வினையா
லான மலத்தை யழிக்கவே யருளயுனாறிரு விழியால்
வானவர் தம்தலைவா! வருவாய் குருவாய் காவாய் எனையே. 6

எனையடைந்த யூழ்வினைகளையறுப்பாய் வள்ளிமணாளனே!
புனைந்த மலர் மாலைகளை பொன்னடிக்கே சாற்றிப் போற்றா
துனையே நாவாலிசைத்து வணங்கித் துதித்திடாது பூவுலகில்
வினையேனாதாரமாய் தேடியப் பொருள் தான் ஏது? 7

ஏது புத்தியெனக்கினி சொல்லிடாய் வள்ளிமணாளனே!
தீதில்லா தெளிந்த ஞான மோன முத்திக்கு
ஈதுயுத்தி யென்றுன்னையேயறியாது தெரியாது
போது போக்கிய புலையனேனையினியேனுங் காவாய் ஐயனே. 8

ஐயுமுறு நோய் தீண்டாதகற்றியருள்வாய் வள்ளிமணாளனே!
பையுமுடன் வைத்த பாம்பணிந்த பரமனை வணங்கி
கையுமிரு காலுமுன்றன் கழற்கே தொண்டு புரிய
வையுமுன்திரு பொற்பாதங்களை முடிமேல் ஒருநாளே. 9

ஒருபொழுதும் மறவேனுந்தன் திருப்புகழைவள்ளிமணாளனே!
கருநோயறுத்து மெய்ப் பொருள் காணவேயென்
இருவினை களைந்திணையடியைப் பற்றியுய்ந்திட
தருவாய் வாழ்வும் ஞானமுமிசையும் நினைத்தபடி ஓதிடவே.10

ஓது முத்தமிழினுள்ளொளிக்குள்ளேயிருக்கும் வள்ளிமணாளனே!
யேதுருவில்லேதமும் துன்பமுயெமையணுகாதிருக்க
மாதுருவாய் நின்ற மறை நாயகன்மைந்தாயென்றன்
தீதுரு பிறவிக்கிருப்பாயென்றுமோர் ஒளடத மாகவே. 11

ஒளடதமாய் துணையாயடியேனுக்கிருக்கவே வள்ளிமணாளனே!
எவ்வகையில் யானும்யிப்புவியிலுய்வேனெனயியம்பாய்
வெவ்வினைகளை வேறாக்கி விரும்பிய படியேயுந்தனாமங்களை
செவ்வையாய் புகன்றிடயருளாயினியுதியாதிருக்க ஓர்கருவிலே. 12

கருவாய் தாயுதிரத்திலுதித்துருவாய் வளர்ந்து வள்ளிமணாளனே!
குருவாயுளமதிலுனையே யிருத்தி வழிபடாது முன்ன
மிருவினையால் கட்டுண்டு மாயையில் சிக்கியயான்மாவை
முருகாய் மணக்க செய்யாதிருப்பதென்ன காரணமோ? 13

காரணமதாக வந்து யானிப்புவிமீதில் வள்ளிமணாளனே!
பூரணமாகிய மெய்ப்பொருளையுணர்ந்து ய்ந்திடயோர்
ஆரணம் கருணையோடென்றெனக்குபதேசிக்க வருவாய்
வாரண முகத்தோன் தம்பியே வரமருளும் கிரி யோனே. 14

கிரிவலம் வருமடியார்க்கு வரங்களருளும் வள்ளிமணாளனே!
எரிவாய் நரகக்குழியில் யானும் வீழாதீடேறவும்
தெரியாது செய்த பிழைகளை பொறுத்து தினமுனை பாடிடவும்
பரிவாயருளாய் ஞானமும் போதமும் நாதமும் கீதமுமே. 15

கீத நாத விநோத பெருமானாகிய வள்ளிமணாளனே!
வாத பித்த நோய் கலந்த வாழ்வுறாதுயுந்தன்
பாத தாமரையையடியேன் மனதில் சிந்தித்து தொழுதிட
வேத கற்பக சொரூபமே வினையேனுக்கு யருளாய் குமரனே!. 16

குமர குருபர முருக சரவணபவனாகிய வள்ளிமணாளனே!
எமராசன் விட்ட கடையேடுயடியேனை சாரும் போழ்து
இமராசன் புதல்வியளித்த வேலாயுதம் காக்குமென்றே
அமராரணைய நீயும் தோன்றி கருணையுடன் கூறுமே. 17

கூறுமாறு கூறிய கவிகளனைத்தும் குமரா வள்ளிமணாளனே!
ஊறுமாறு நாவினில் பிழையற சரளமாயோதிடவேயளிக்க
ஏறுமாறு மயிலினில் வேலொடும் யானும் வேண்டதுயர்
ஆறுமாறு யருளாயினி தவிக்காது தூண்டிற் கெண்டையாகவே. 18

கெண்டையங் கண்ணாள் ஒரு சேரணைத்த வள்ளிமணாளனே!
வண்டினம் பாடும் வடிவழகாயுனைப் பாடாது நாடாது
பண்டையம் பழவினையால் கட்டுண்டு மதிமயங்கினேனே நின்
தண்டையந்தாளிணைக்குதவா வெறுங் கேதகை யாகவே. 19

கேதகைய பூமுடித்தோர் மயலில் சிக்காது வள்ளிமணாளனே!
ஏதகையதோர்சொலுபதேசித்தருளாயினி
வேதகையும் விளங்கிய சின்முத்திரையும் கொண்ட பரமனின்
பாதகையும் பரவிய ஞானபலமும் திண்ணமாய் கைத்தருணமே. 20

கைத்தருணசோதியத்திமுக வேதனுக்கிளைய வள்ளிமணாளனே!
தைத்தயயிலால் தவங்கள் பலவியற்றிய யசுரனை
நைத்து நற்பேறு நல்கிய வரையொணாபாதங்களை யென்றும்
வைத்துயுளத்திலுருகிட வாராது நீங்கும் கொடிய னவே. 21

கோடியமறலியுமவனது கட்கமும் வருமுன் வள்ளிமணாளனே!
பிடிநடையாள் பேருவகையோடு பெயர்த்தளித்திட்ட
இடியு மின்னலும் தோற்குமெனவே வேலாயுத மெடுத்திட்டு
கடிநகையோடு காத்திட வாரும் கல்யாணி பெற்ற கோமளமே! 22

கோமள பரிமள சுகந்தமணியும் மார்பனே! வள்ளிமணாளனே!
சோமனொடருக்கன் முதலாய கோள்களும் தன்நிலை மாறிட
தூம மொடு நெய் தீபமுமிட்டிணையிலாயுந்தன்
நாம மொடு பாடிடயருளாய் பதிகள் எங்கெங்கிலுமே. 23

எங்கேனு மொருவர் வந்திரக்கும் வேளையில் வள்ளிமணாளனே!
அங்கே யவர்க்கீந்திட யருளாயின் முகமொடு பொருளும்
பங்கேருகனை புடைத்து படைப்பை நடத்திய பிரணவக்குமரா!
சங்கே முழங்கிய சாரங்கன் மருகா! கூறினேன் சரணங்களே! 24

சரணகமலாலயத்தை சிந்தையிலிருத்திட வள்ளிமணாளனே!
பரகருணைபெருவாழ்வை பரிவாகவே யெமக்கு கொடுத்து
தரணியில் புகழ்பெற்ற நின் திருத்தலங்களின் மகிமை பாடிட
வரமாயருள்வாய் நயமுடன் சேர்த்து நற்சாலமுமே. 25

சால நெடுநாளலைந்துன்னருளைப் பெறவேவள்ளிமணாளனே!
காலமும் வெகுவாய் கழிந்தே போனதே கார்த்திகேயா! யறியேனே
பாலகனாயூமைக்கருள் புரிந்த பரமன்மைந்தாதினம்
ஓலமிட்டேனுனையே நினைந்து தீரா யென்னுடனாகிய சினமே. 26

சினத்த தெத்தனையிச்சிறு மணியுடல் தான் வள்ளிமணாளனே!
கனத்ததெத்தனை கபடுகளொடிருமாப்புமிழிநோயு சேர்த்து
எனத்துளெத்தனை வகையாய் புக்கிடினும் நில்லா தொழிய
மனத்துளுன்னை புகுத்திடவேயெழுவாய் அணி சீரெனவே. 27

சீர்சிறக்கு மேனி பசேல் பசேலென்றிடவே
பார் வியக்க சோதி பிழம்பாய் தாமரையிலுதித்து
போர் மிகுத்த சூரனோடு பொருதி பேற்றினை யளித்த
கார் வண்ணன் மருகா! வள்ளிமணாளனே! வினைகளை சுட்டிடுமே. 28

சுட்டது போலாசையை விடாது வளர்த்து வள்ளிமணாளனே!
பட்டது போதுமய்யாயினி படமுடியாது புவியினி
லிட்டமுடனிட்டது பிடியளவேயாயினும் யேற்று
பெட்டகமாய் திகழ பிரியமுடனுந்தன் கிருபையைச் சூழுமே. 29

சூழும் வினைகட்கேற்பறொடரும் வல்வினைகளை வள்ளிமணாளனே!
வீழும்படிச் செய்வாய் விரை மாமலர் பாதங் கொண்டு
பாழும் பிறவி படுமாயை தான்யென் செயுமே
வாழும் நெறியும் பின் முறையாய் வந்து செனித்திடுமே. 30

செனித்திடுஞ் சகலயுயிர்கட்குச் சரணாகதியாய் வள்ளிமணாளனே!
இனித்திடுமினிய வடிவழகும் வரமருளும் பன்னிரு கரங்களும்
குனித்திடுந் திருநீறு தாங்கிய நுதலும் குமிழ் மென்னகையும்
தனித்திடும் போது நல்குமே பெருங்கருணையும் சேமமுமே. 31

சேம கோமள பொற்பாதங்களை நினைந்து வள்ளிமணாளனே!
தாமமொடு தீபமுமிட்டுத் தவறாது வணங்கிடவேயுந்தன்
நாமமு மெந்தனுளேயென்று மகலாதிருத்திடவே
சோம சுந்தரேச்வரர் மைந்தா! பகர்வாயோர் சொல்லே. 32

சொற்பிழை வராமலுன்றன் திருப்புகழைவள்ளிமணாளனே!
கற்பவர் தமை கருணையோடு நாடி நல்லருளே புரிவாய்
நற் தவத்தவர் தொழும் நற்பயனே! நல்மருந்தே! நல்முத்தே!
அற்பனின் பிழை பொறுத்தருளாயானந்த சோதியே! 33

சோதி சொரூபனே! சொல்லொணா மணியே! வள்ளிமணாளனே!
ஆதியே! யமரர்களேறே! யடியேனுக்கம்மையுமப்பனுமாய்
போதித்து புல்லறிவகற்றி யென்றுமுனையே வணங்கி
ஓதிடவே தாராய் புகழும் செல்வமும் கல்வியும் ஞானமும். 34

ஞானங்கொள் மூடனேயென்று யென்றனீங்கா
ஊனங்களை நீக்கி யுய்வித்துன்னடியை நல்காய் வள்ளிமணாளனே!
கான மயில் வாகனனே! காலனணுகாது காவாய்
ஏனமும் கொம்புமுடைய ஐமுகன் பெற்ற அஞ்சுகமே!. 35

அஞ்சுவித பூதமு மதன் செயல்களுமுணர்ந்து வள்ளிமணாளனே!
நெஞ்சமதில் வேண்டியதை புகுத்தி வேண்டாததை விலக்கி
தஞ்ச மடைந்தேனுன்னையே நம்பி தயவுடனேயருளாய்
கஞ்ச மலர்ப் பாதங்களையினி வாராமல் இடரே. 36

இடர்மொய்த்திருவினையோடிக்கடம் வள்ளிமணாளனே!
தொடர் பிறவித் தீயில் சிக்கி வேகாது தடுத்து
படர் முல்லையாயுந்தன் பாதார விந்தங்களில் படர
சுடர்வேலவா! கருணையோடருளாய் தீமைகள் நாடாமலே. 37

நாடா பிறப்பை பெற்று வள்ளிமணாளனைவழிப்பட்டுய்யாது
ஓடாய் தேய்ந்து யாக்கையு மழியு முன்னரே நீயும்
பாடாய் நாவே! பரவசங் கொண்டுயானந்தமாய் யாடி
சூடாயவனிருபாதங்களை முடிமேல் பூரணவடிவாகவே! 38

வடிவது காட்டி வள்ளியை வயப்படுத்தி மணந்த வள்ளிமணாளனே!
கொடியது வாராது கூர்வேல் கொண்டு குறித்த நேரத்தில்
பொடியது யாக்கி கவியினைத் தரவேயவனியில் முழங்கும்
இடியது போல சிகண்டியிலேறி வாராய் ஏடு களுடனே! 39

ஏடு மலருற்றிணையடிகளை நித்தம் தொழாது வள்ளிமணாளனே!
கேடுற்று கேள்வியுமற்று கீழ் பிறப்புற்று வீணே
காடுற்று கருகாது கான மயில் வாகனா! யுந்தன்
வீடுற்றிருக்கருளாய் வினையேதும் அடையாதே. 40

அடை படாதாவியும் கூட்டினுள்ளே வள்ளிமணாளனே!
இடை விடாது மாறி மாறி புகுந்திடரோடு
விடை பெறாது வீணாயுழலாதுலகெங்கிலும்
தடைபடாதயிலாலருள்வாய் சித்திகள் எட்டுமே! 41

எட்டுடனொரு தொளையோடு கூடிய குரம்பையை நம்பி
கெட்டு நொந்தழியாது வள்ளிமணாளனே! காருமே பரிவாக
பிட்டுக்கு மண் சுமந்தோன் பிரிய புதல்வா! யடியேன்
பட்டுப்போகாதிருத்திடுவாய் நின்னிருதாட்களை இணங்கியே. 42

இணங்கித்தட்பொடிளந்தாமரை மொட்டுக்களை வள்ளிமணாளனே!
வணங்கியுந்தன் திருப்பாதங்களுக்கு சமர்ப்பித்தேன் யேற்றருளாய்
அணங்கொடமரர்கள் சூழ வலம் வருவோனே! யெமைநற்
குணங்களொடு தூயவனாக்கி வினைகளைப் போக்காய் காணாமலே. 43

காணாத தூரமதை கடக்கவே வள்ளிமணாளனே!
யேனோ வீணாகயுயிருமுடலும் வழியே தெரியாதலைகிறதே
பூணாத பூடணமதை பூணவேயடியேனுக் கருளாய்!
சோணாடீசன் புதல்வா! சொன்னேன் கவிகளை அணியாகவே! 44

அணி செவ்வியர்யறுவரயணைப்பில் தவழ்ந்து வளர்ந்து
பணியணை மீது துயிலும் பாற்கடல் பரந்தாமன் புதல்வியரை
மணியோடிழையுமரகதமாய் மணந்த வள்ளிமணாளனே! யடியேன்
பிணிகளை நீக்கி யருளாயுந்தனிணையிலா இணை களையே! 45

இணையதில் மனதை யிரவும் பகலும் செலுத்து மடியார்களை
அணைந்தன்பால் வள்ளிமணாளனையுயிருமுடலுமொன்றாய்
பிணைந்து தொழுதிடஅவனது வேலும் மயிலுமெங்கும்
துணையாய் நிற்குமே! காணலாமே காணொணாததையே! 46

காணொணாத யுந்தன் திருவுருவைக் காணாது வள்ளிமணாளனே!
பூணொணாததை பூண்டு பொல்லாக் குரம்பையை வளர்த்து
பேணொணாதை பேணி காத்துனையே பாடாது
நாணொணாததை நாடாதழிவேனோ யருளாய் தண்டைகளையே!.47

தண்டையணிப் பொற்ப் பாதங்களை சரணமென்றடைந்தவர்க்கு
பண்டையம் பெரும் வினைகளை பரிவாகறுப்பான்வள்ளிமணாளன்
கெண்டையங் கண்ணாள் பெற்ற விசாகனே! கதியென்றிருப்போர்க்கு
கொண்டயாவியும் புகாதிருக்குமேயினியோர் தசையிலே. 48

தசையாகிய கற்றையொடு நரம்பென்பும் சேர்த்து வள்ளி மணாளனே!
பசையாகிய யுதிரமு மோட யுச்சி முதல் பாதம் வரை
இசைவாணியின் கணவன்யிருவினைகளொடென்னையும் படைத்தானே
திசையறியாயெமக்கு திசையாயிருப்பாய் தாரணியிலே! 49

தாரணிக்கதி பாதகமாகிய செயலே புரிந்து
ஓரணியா நின்ற யசுரரோடு திரண்டெழுந்து சமரே புரிந்து
வேரணியாய் நின்ற சூரனை வேலாலிரு கூறிட்ட
பூரணி பெற்ற வள்ளி மணாளா! தருவாய் நின் திருவடிகளையே! 50

திருமகளுலாவு திருமார்புடையோன் மருகா! வள்ளிமணாளனே!
உருவமாயுந்தனையுள்ளே யுருவகித்து நோக்கினேன் நீயும்
குருவாய் தோன்றி சித்திகளெட்டையுங் குறைவின்றி
அருளியழிப்பாய் தொடரும் பிணியெனும் தீயுருவையே! 51

தீயும் பவனமுந் நீரும் வெளியு மொளியு மிலையுங்
காயுங் கனியுமாய் யனைத்துயிர்க்கும் படைத்து வள்ளிமணாளனே!
சேயுஞ் செல்வக்குமரனுமாய் விருத்தனுமாய் யெங்குமெப்போதும்
தாயுந் தந்தையுமாயிருக்கிலடியாரை யணுகுமோ துயரங்களே! 52

துயர மறுத்து தூய வாழ்வினை கொடுக்கும் யென்றுங்
கயவர் நட்பை விடுக்கும், வள்ளி மணாளனின் கழலடியை
அயராது பாடி பணிக்கும், முத்தியை கொண்டு சேர்க்கும்,
உயர்ந்த நெறியை யிதுகாறுந் தேடாதிருந்தேனே தெரியாமலே. 53

தெரிவை மக்கள் செல்வம் பலவுமிருப்பினும் கூற்றன்
உரிய நாளில் வரும் வேளையில் சதமாகுமோ?
அரிய யனறியாதவன் மைந்தனை, வள்ளிமணாளனை பூசனைகள்
புரிந்து போக்கலாமே பிறவியை, பெறலாமேயின்பத் தேனையே! 54

தேனை வடித்துச் சொரிந்து திருப்பாதங்களை வானவருந்தொழுதிட
வானைப் பிளந்து வரையெனத் திரண்டத்தானவரை யழித்து
மானை யணைந்து மகிழும் வள்ளிமணாளனே! யருளாய் யெந்தன்
ஊனை ஒழித்துமக் கன்பால் பாமாலைகளை தொடுத்திடவே! 55

தொடுத்த நாள் முதல் கவிகள், முடிவுறும் வரை
எடுத்த ப்பிறவிக்கு இடுக்கண் ஏதும் வாராது வள்ளிமணாளனே!
விடுத்த யுன்றன் பணிகள் யாவும் செம்மையாய்ச்சிறப்புற்றிட
கொடுத்தருளாய் தெம்பு முறுதியும் நசை ஆகிய தோலுக்கே. 56

தோலொடு மூடிய கூரையை யுனதாக்கி வள்ளி மணாளனே!
கோலொடு கொடியுங் கொண்ட கோமளயுருவமதை
பாலொடு தேனுங் கலந்தாற் போற் திருப்புகழாற் பாடி
ஞாலமும் தலந்தோறும் வலம் வர தீமைகள் நகருமே.57

நகரமிரு பாத நாதனுக்கு நற்குருவே! வள்ளிமணாளனே!
பகரும் பாமாலைகளை பன்னிரு செவியால் பரிபூரணமாய் கேட்டு
இகபர சௌபாக்கியங்களையருளயினிதாய் மயிலேறி
சிகர வினைகளையறுக்க வருவாய் சற்குரு நாதனாகவே. 58

நாத விந்துகலாதி நமோ நமவென்று துதிக்க போதகமே
போதிக்க வருவாய்! பொற்குமரா! வள்ளிமணாளனே!
பாதகமே யென்றுமணுகாது பரகருணை பதம் பெறவே
வேதமே யுருவாய் வந்து ஞானத்தை நல்காய் நித்தமுமே. 59

நித்தமு முந்தன் பாதமதை மனதால் நினைந்து வள்ளிமணாளனே!
சுத்த சிவஞானானந்தத்தோடு கலந்து நீங்கா தென்றும்
உத்தமதான வாழ்வை பெறவே யுலகிலடியேன்
சித்தமதாக வருவாய் சிறியேனையுங் காத்திடவே நீயே. 60

நீலங்கொள் மேனியனும் ஞானங் கொள் வேதியனும் வியக்கும்
ஆலங் கொள் சோதியன் அருமை மைந்தா! வள்ளிமணாளனே!
ஓலங் கொள் யசுரனை யன்று வதைத்து வேலொடு மயிலுமாய்
கோலங்கொள் குமரா! யோதிடவேதாராயரிய நூலையே! 61

நூலினை யொத்த யிடையாளாகிய யுமையம்மையிடம்
வேலினை வாங்கி வெகுண்டெழுந்த சூரனை வதைத்து
காலினை கருணையுடன் முடிமேலிட்ட வள்ளிமணாளனை
தோலினை மூடிய கூரையுளிருத்திட பயணமும் நெடிய தாமோ? 62

நெடிய வடகுவடுமிடிய வேலை யெறிந்தவள்ளிமணாளனே!
அடியவன் யுள்ளமதில் பன்னிருவிழியோடு முகங்களாறும்
முடியது முதல் தண்டையுந் சிலம்புமணிந்த பாதங்களும்
படியவே யருளும் யென்றும் நீங்கா நேச முடனே! 63

நேசா சாரா! முருகா! யென்று நிறைவோ டோதி
ஆசா பாசங்களை துறந்த முநிவர்களை சென்றுயாட்கொண்ட
வாசா! வள்ளிமணாளனே! வரையென திரளு மரக்கர் குல
நாசா! யடியேன் துயர் களைந்து ஞானமே பகர்வாயே! 64

பகர் தற்கரிய பொருளாய் பதியெங்கிலுமுறையுவள்ளிமணாளனே!
நகர்தற்கரிய நிலை வந்தெய்தா முன்னரேயான்
நுகர்தற்கரிய திருப்புகழையென்று மோதி வுய்வுற
புகர்தற்கரிய பாதங்களைத் தருவாய் தண்டையோடு பாடக முமே. 65

பாடகச் சிலம்பணிந்த பாதங்களை யென்மேல் பொருத்தி
நாடகங்களால் பலவாறாய் நடித்து நடங்கள் பலவே புரிந்த
ஆடகக்குன்றோன்மைந்தா! வள்ளிமணாளனே! யடியேனுய்ய
ஊடகத்தோடுறைந்து னதாக்குமே யிப் பிறவியையே. 66

பிறவியான சடத்தை யடைந்துனை பேசாநாட்களை
உறவினொடுற்றாரும் சதமென்றெண்ணி கழித்து
மறவியொடு மதமுங் கொண்டு மதிமயங்கியழியாது
துறவிகளும் தொழும் வள்ளிமணாளனே! காருமெனைபுவியிலே! 67

புவிக்குன் பாதங்களை யாதாரமாக வைத்திடரால்
தவிக்கு முயிர்களையாட்கொண்டு யிரட்சித்துக், கரங்களை
குவித்து வணங்குமடியார்க்கருளும் வள்ளிமணாளனே! யடியேன்
செவிக்குன்றன் திருப்புகழை பாய்ச்சிட யருளாய் பூரண மாகவே. 68

பூரண வாரகும்பங்களை வைத்துனை பூசிக்க
ஆரணமேதுமறியேனேவள்ளிமணாளா! யடியேனையாட்கொள
காரணமேது சொலாய் கடையேன் பிழைபொறுக்க
வாரண மங்கையு மெச்சு முமக்கிது பெரிதோ? 69

பெரியதோர் கரியையுரித்தவன் குமரா! வள்ளிமணாளனே!
அரியதோர் மானிட பிறவியை பெற்று வெண்ணீற்றை
தரியாது நுதலிலே, நாவில் கூறாது நாமங்களையே, வினையேன்
மரித்தே போவேனோ? காவாய்யெமை பேத மிலாமலே. 70

பேதக விரோதமான பிரபஞ்ச வாழ்வில் மூழ்கி
பாதகங்களே பலவாராய் புரிந்து பயனொன்றுங் காணாது
சாதலுக்கே பிறப்பெய்தி நொந்தழியாது வள்ளிமணாளனே!
போதகமே யருளாய் தீராய் யெந்தன் யேதங்களை பையவே! 71

பையரவு யணையிற்றுயிலும் பதுமநாபன் மருகா! வள்ளிமணாளனே!
கையைந்துடையோன் துணையால் குறப்பாவையையாட்கொண்டு
ஐயைந்தோடிரண்டொன்றுரைத்தானுக்கு குருவாகி பிரணவ மதை
நையவேயுரைத்த நகுமுகப்பெருமாளேயருளும் பொற்றாளையே! 72

போக கற்பக் கடவுட் பூருகமுடையோனைக் காத்த
நாக விடமே மிடறினிலடக்கியவன் மைந்தா! வள்ளிமணாளனே!
மேக வண்ண னும் மெச்சும் மருகா! யடியே னுயிர்க்கு
யோக சித்தியை கொடுத்து தடுத்தாட் கொள்வாய் மனதையே! 74

மனக் கவலை யேதுமின்றி மதியைத் திருத்தி மண்ணினில்
உனக் கடிமையே புரிந்து யுடலுமுயிரு முருகிட
எனக் கென்றருள்வாய் வள்ளிமணாளா! யின்னமுமிறங்காயோ?
தனக் குவமையிலாதவனே! தருவாய் கடப்ப மாலையையே! 75

மாலையில் மாலையை வழங்கிட வள்ளிமணாளனே! நீயும் விரைவாய்
சோலையிலுலாவிடும் புரவியிலேறி வாரும் யானும்
ஆலையில் நலியுங் கரும்பாய் துரும்பாய் சிதையாதுந்தனை
வாலையில் வணங்கிட வளமிகு பார்வை பாரும் மின்னாருடனே! 76

மின்னார் செஞ்சடையில் மிளிரும் மதியைச் சூடியவன் மைந்தா!
பொன்னாலொளிரும் பூரணவடிவழகைக் காணும் பேற்றை
தன்னாலறியு முணர்வையுணர்த்தி வள்ளிமணாளனே! நீயும்
என்னாவியைத் தொடரும் வினைகளை வேலாற் விரட்டி முந்துமே! 77

முந்து தமிழ் மாலைகளை முழுவதுமாய் பாடிட யானும்
வந்து புவனமதில் வடிவெடுத்து வெகு நாளாய்
உந்து மன்புமார்வமுங் கொண்டேன் வள்ளிமணாளனே!ஞானமுந்
தந்து நீயும் கருணையே டேற்பாயிடர்கள் மூளாமலே. 78

மூளும் வினை சேர மும்மூன்று தொளையுடைய குரம்பையை
நாளும் பாதுகாத்தே நரையுந்திரையு மெய்தியப் பின்னர்
மாளும் யிம்மாய வாழ்க்கை தொடராது வள்ளிமணாளனே! நினதிரு
தாளும் சூடி தமியேனுக்கு பகர்வா யோர் சொற் மெய்யாகவே! 79

மெய்க்கூணைத் தேடி மேதினியில் நெடுநாளாய் வள்ளிமணாளனே!
பொய்யாய்த் திரிந்து புகலிட மொன்றுங் காணாத டியேனை
செய்யாய்ச் சிறப்பான தோர் வாழ்வடைய செல்வக்குமரா! யுய்யவே
வைய்யாய் நின்னிருதாளை என்மேல் வளம் பொழி மேகமாகவே! 80

மேகலை ஒளிரும் மேதகு மேனியாள் பெற்ற வள்ளிமணாளனே!
மாகலையாய் வந்த யசுரனை மாய்த்தருளியவன் மருகா!
ஏகலையாய் மாறும் யிரேசகமதை யொருநிலை படுத்திட
பாகலை ஞானச் சொற் பகர்வாயினி பரமன்மைந்தனே! 81

மைந்தரினிய மாதரும் வருவரோ மறலி வருந்நாளில்
நைந்துருகி நறுமலரால் வள்ளிமணாளனையர்ச்சித்து நாவால்
பைந்தமிழ் மாலைகள் பாடியாடி மகிழ்வாய் மனமே! அஃது
ஐந்தோடாய யாக்கையை யறுத்து பரகதிக்கு வழிமொழிந்திடுமே! 82

மொழிய நிறங் கறுத்து முழுது மொடுங்கா முன்னரே
பழியுறு சொற்களும் பகையும் வினையுந் தொடராது செந்தழல்
விழியுங் கொண்டு காலனு மணுகாது வள்ளிமணாளனே! நீயும்
எழிலாய் மயிலேறி வேற் கொண் டேவியே மோது மே! 83

மோது மறலியொரு நாள் தேடியே வரும் போழ்து
ஏது மறியேனாகிய யென் பிழை பொறுத்தாங்கே
ஓது மறைகளினுட் பொருளை தெரிந்துய்ந்திட
மாதுமையாள் பெற்ற வள்ளிமணாளனே! களைவாய் துயரங்களே. 84

துயர மறுத்து நினது தூய தெரிசனமுங் காட்டிட
அயனுமன்று பதித்த வரையோலையை யயிலால் கிழித்திட
நயமுடனுமக்கே யடிமை கொண்டிட வள்ளிமணாளனே! ஈராறு
புயமொடு யேறுமயிலேறி வரவேணுமிம்மாயாயுலகினிலே! 85

மாயா சொரூபிணி பெற்ற மாசற்ற புதல்வா! வள்ளிமணாளனே!
ஓயாமல் நானுமுலகினிலுழைத் தொருபயனையுங் கானேனே
தாயாகி சேயெனை தாங்வகுதற்கு தயவுடனேவாருமே! நுதலிற்
தீயாகி யுதித்த தேசிகா! தென்பரங்குன்றுறை குயிலே! 86

குயிலொன்று குமரா! குகா! என்று கூவியழைக்கவே!
மயிலுந் நின்று மருளாகி பின் தெளிந்து தோகை விரித்தாட!
அயில் கொண்டு நீயுமவை நோக்கி யுடனாடி!
ஒயிலாக வருகவே வள்ளிமணாளனே! யுடலாகியயுதிரமுமுருகவே! 87

சீயுதிர குகையுடன் கூடிய கூரையுமழிந்து யினியோர்
தாயுதிரபையில் நிறைந்து மீண்டும் சென்ன மெடாது
வாயுதிரம் கக்கிட யசுரரை யழித்த வள்ளிமணாளனே! தொடரும்
நோயுதிர்ந்து நுமக் காளாகிட யருளாய் நுதற் தீயூறியவனே! 88

தீயூதை தாத்ரி சலவெளி யொளியை செழுமையாய் சேர்த்த
காயூறி கனியாகி காய்ந்து வித்தாகி முளைக்கவே செயும்
வேயூறுந் தோளருக்குபதேசித்த வள்ளிமணாளனே! யெனைப்பற்றிய
நோயூறி நுண்ணறிவு யடங்கா முனுன்னருளை ஈயெந்தையே! 89

ஈயெறும்பு முதலாக யெண்ணாயிரங்கோடியுயிர்களுக்கும்
தாயென பரிந்து காத்திடும் தயாநிதியே! வள்ளிமணாளனே! யெனை
தீயெனும் வறுமை தாக்காது தெய்வ வடிவுந் திருவருளுந் தந்து
சேயெனை காவாய்ச்செந்தூரா! சேரவே யருளாய் நின்கையொடே! 90

கையொத்து வாழுமிந்த பொய்யொத்த வாழ்வை நம்பி
வையொத்து இணங்கி வாழ்மின்காள்! கடைத்தேற வள்ளிமணாளனை
பையொத்த இதயந்தனிலிருத்தி யுருகி யின்புருவீர்! அஃது
ஐயொத்து வாழா தன்னலினடியை சேர்க்குமே மெய்யாகவே! 91

மெய் சார்வற்றே மேதினியில் மெத்தவும் நொந்திளைத்துப்
பொய் சார்வுற்ற பொருளை போதாதென்று தேடியே முடிவில்
உய் சார்வுற்ற பெருமானாகிய வள்ளிமணாளனை தேடாது வீணே
துய்த்தாரன்றோதொடர்வினையால் கட்டுண்டுபகலொடு இரவுமே! 92

இரவொடும் பகலே சேர்த் தெழுதிய நாட்கள் முடிவுற
வரவிடும் தூதுவர் வந்தெய்தா முன் வள்ளிமணாளனே! யெந்தன்
சிரமது வணங்கிட! மனமது நினைத்திட! நாவும் பாடிட!
கரமது குவித்திட! காவாய் இனியும் நலிந்து நாரா காமலே. 93

நாராலே! மனமெனும் பூவாலே! நாளும் தொழுது வள்ளிமணாளனை
நீராலே! நிட்டையுடன் தொண்டு செய்வாரோ டிணங்கியே
சாராதே போயின் சருவிய சாத்திர வேதங்கள் பயின்றாலும்
வாராதே வரைஞானமும், கல்வியும் மெய்பொருளும் அரிதாமே. 94

அரிமருகோனே! யயிலோனே அறுமுகனே! வள்ளிமணாளனே! எனத்
திரியிட்டு தீபமேற்றி சிந்தையில் தியானித்து மலர்களை
சொரியவே! யுன்றன் திருவடிக்கு நீயும் கருணையோடேற்பாய்!
பரிமேலழகிய பெருமாளே! பரிவோடு நீக்காயென் இருளையே. 95

இரு நோய் மலத்தை சிவவொளியால் மிரட்டி வேறாக்கி
உருநோய் யாவும் உடலிற்றீண்டாது வள்ளி மணாளனே! இனியோர்
கருநோயணுகாது யுன்றன் கழற்கே யாளாக்கிட
திருவாவினன்குடி வளர் சேவகனே! திருவாய் உரையுமே! 96

உரையுஞ் சென்று நாவும் வறண்டுயிரும் பிரியுமுன்
கரையுஞ் சேர்ந்திடயருளாய் வள்ளிமணாளனே! பற்றிய மாய
திரையும் விலகிட பாராயே ரகத்திறைவா! யுன்றன்
விரைமலர்ப் பாதங்களை தாராய் வெகு அலங்காரமாகவே! 97

அலங்கார முடிகிரண கிருபாகரா! பலபுட்ப பரிமளவாசா!
துலங்கா நாவையுந் திருப்புகழ் தேனாற்றுலங்கவேச் செய்து
கலங்காயுள்ளமுங் கருணையோடருளி வள்ளிமணாளனே! சகல
தலங்காணும் பாக்யம் தருவாய் மூலாதாரமாகவே! 98

மூலாதாரமொடு மும்மலங்களை முறியடித்து வள்ளிமணாளனை
தோலாதாரமொடு வேய்ந்த கூரையுள்ளிருத்தி யென்றும்
வேலாதாரமொடு வினைகளை போக்கி விருப்புடன் நாவெனும்
நூலாதாரமொடு புனைமாலை கூட்டும்! சித்திகள் நாலிரண்டையுமே! 99

நாலிரண்டு திசையிலும் நவிலுகின்றபதிகளனைத்திலுந் தண்டை
காலிரண்டையும் பதித்த வள்ளிமணாளனே! வினையேனைகாத்திட
வேலினோடு குறவஞ்சியுந் தெய்வகுஞ்சரியுஞ் சூழ வாருமே!
பீலினோடாடும் பரிமேலழகா! ஈடேற்றுவாய் எலுப்புருவையே. 100

எலுப்பு நாடிகளொடு இழைத்த தசையுதிரம் கூடிய குடில்
வலுத்து நாளடைவில் முதிர்ந்து தளர்ந்து இறந்து பிறந்து
அலுத்தே போனது வள்ளிமணாளனே! இனியாகிலும் சத்தி வேலைச்
செலுத்தி யிவ்வுயிரை யேற்பாய் சேராது ஒர் தோலெலும்பிலே. 101

தோலெலும்பொடு தொடங்கிய வாழ்க்கை யுலகிற்றுவளாது
பாலெனதூய்மையும் பளிங்கென பிரகாசமுங்கொள வள்ளிமணாளனே!
சேலென கண்ணாள்! குறமங்கையை சேர்ந்து கலாப் புரவியில்
வேலென கண்ணாள்! வாரண மங்கையுடனாடி வாருமே! யலையலையாகவே! 102

அலைகடல் நிகராகிய யவுணர் சேனையை யழித்த வள்ளிமணாளனே!
இலையொடு பூவுங் காயுங் கனியும் மாறிடவேயருளும்
வலைகொடு வீசிய வீதிவிடங்கருக்குபதேசித்த விசாகா!
தொலையவே துன்பங்கள் துரிதமாயருள வாரும் வேலொடுமே! 103

வேலொத்து சூரனை வென்ற வள்ளிமணாளனே! யுனதிரு
காலொத்து யென்றும் நீங்காது வாழும் வாழ்வைத் தருவாய்
நூலொத்த நுண்ணிடையாள் பெற்ற நேயா! பருகவே யருளாய்
ஆலொத்த திருப்புகழெனுந் தேனிற் கலந்த பாலோடுமே! 104

பாலோ! தேனோ! பழச்சுவையோ! கரும்பின் பாகோவென
மேலோரும் வாய் குழறி துதித்து நிற்கும் வள்ளி மணாளனே!
ஏலோ! ஏலேலோ! வெனயாயலோட்டிய மானையாட்கொண்ட
மாலோன் மருகா! தருகவே கடப்ப மாலையோடு முல்லையுமே! 105

முல்லைக்கு நிகரான முத்துமணியாரமணிந்த வள்ளிமணாளனை
எல்லையிலா பேரன்பாலிராப்பகலுஞ் சிந்தையிலிருத்திட
தொல்லைகளென் செயுந் தொடரும் துரிசுகளென் செயும்! யெந்நாளும்
இல்லையே யிடுக்கண், சேராது வெகுளியுங் கோபவஞ்சமுமே. 106

வஞ்சங் கொண்டுறவாடு வோரை யிணங்காது வள்ளிமணாளனை
கொஞ்சு தமிழால் பாடி பரவிட நினைவாய் மனமே!
வெஞ்சினமும் மதமும் விலகிடவே யவனிரு தாளில்
தஞ்சமடைய பெறுவாய்! மேலானதோர் வானோருலகையே! 107

வானோர் வழுத்துனது பாதமலர்களை சூட்டுவாய் வள்ளிமணாளனே!
ஏனோர் வழியுங் காணாது யலைகிறேனே யெமக்கியம்பாய்
நானோர் யேதுமறியா மூடன் யென்னையுங் கருணையோடேற்பாய்
மானோர் கையிலேந்தியவன் மைந்தா! மாற்றும் என் விதியையே. 108

விதிபோலு பிறவித்துயரென யோய்ந்து வீழாதுவள்ளிமணாளனே!
கதியென்றிருப்போர்க்கு வேலும் மயிலும் துணையாகும்! அஃது
சதிகாரரை சடுதியில் சாடுமே! வீடுமே வெவ்வினைகள் யாவையும்!
பதியுமே ஞானத்தை! புரியுமே போற்றிடும் பற்பல வீரங்களையே! 109

வீரமதனூலை விரும்பி ஓதியுணர்வழியாது வள்ளிமணாளனின்
ஈரமிகு பாதங்களையெந்நேரமுமெண்ணி பரவிய அருணகிரியின்
ஆரமிகு சந்தங்களை கொண்ட யரிய திருப்புகழ் பாக்களை
வாரமினிதவறாது ஓதுவீர்! வெல்வீர்! மாரனின் வெஞ்சிலையையே! 110

வெஞ்சரோருகமதில் வெண்மதியாய் விளையாடிய வள்ளிமணாளனே!
தஞ்சமோ யெனக்குன்னிரு பாதமோயறியேனே! கருணையுடன்
கொஞ்சமோ நினதருட் பார்வையை! பார்க்கினும் வருமோயிடர்
அஞ்சுமோ! யிவ்வுயிருமுடலும் கூறாய் வேடற்றெய்வமே! 111

வேடர் செழுந்தினைக்காத்த வேடிச்சியை மணந்த வள்ளிமணாளனே!
தேடற்கரிதாகிய நின்றிருவடி தரிசனம் பெற்றுய்ந்திடவும்
பாடற்கரிதாகிய நின்திருப்புகழைப் பாடி பரவசமெய்திடவும்
கூடற்பெருமான் குழை செவியிலுபதேசித்தவா! யருளுமிக்குழவிக்குமே! 112

குழவியுந் தாயுமன்பாற் குறிபறிந்து குழைவாற் போற்
அழலுருவாகிய யண்ணலின் மைந்தா! வள்ளிமணாளனே! யெந்தன்
பழவினைகளை பார்தறுப்பாய் பழமுதிர் சோலையில் குமரா! யுந்தன்
கழலிணைகளை யெமக்குத் தாராய்! தொடரும் பழியோடிடவே! 113

பழிப்பவர் வாழ்த்துவரெனபலவாறாக யிவ்வுலகினிற் வள்ளிமணாளனே!
அழியும் யிவ்வுடற் கொண்டு யலைகின்றனரே! முத்திபேறடைய
வழியுங் காணாது வாழ்நாளைப் போக்கி பிறப்புக்கேதுவாகிய
இழிதொழிலே புரிந்திருவேளையும் புலம்பி அழுதழுகின்றனரே. 114

அழுது முன்னடியினையன்பால் சிந்தித்துருகி கைகூப்பி
தொழுதுந் தூய செய்கையால் தொண்டு புரிந்து வள்ளிமணாளனே!
பழுது சிறிதேனுமிலாது னையே பாவித்திருப்போரை
முழுது மாட்கொண்டு கருணையை பொழிய வாரும் விழைந்து! 115

விழையு மனிதரையு முநிக்கணங்களையு நாடியே தேடிச் சென்று
இழையுந் தண்டையுஞ் சிலம்புமணிந்த விரைமலர் பாதமருளும்
குழையணிந்தவன் குமரா! வள்ளிமணாளனே! குறைதீர்தடியேன்
பிழை பொறுத்தருளாய்! நின்சீதள பாத களபமதையே! 116

களப் மொழுகிய திருமேனியினழகோடு திருவெண்ணீறணிந்த
இளங்குமரா! வள்ளிமணாளனே! அமரோரை காத்திட குமிழ்நகையோ
டளவிலாயாற்றலுடன் வேலை கையில் தாங்கி யசுரன்
தளமுமுறிய கடாவியதைவியத்ததோ! நின்கடம்பின் அளியுமே! 117

அளியு சுழலுமொரானந்த வேளையில் வள்ளி தெய்வயானையுடன்
ஒளிரும் சுடர் வேலினொடொயிலாய் மயிலேறி வாரும்! கற்பக
களிரும் காக்க யுனையே தொழுதழுதேன் வள்ளிமணாளனே!
துளிரு தீவினைகள் றொடராது துணையே புரியும் நாளுமே. 118

நாளும் நற்றாமமெடுத்து நற்றாள் தொழுது வள்ளிமணாளனே!
மாளும் யிவ்வுடற் கொண்டு மாறாது தொண்டே புரிந்து
மீளும் படியோர் போதகச்சொற் பகர வருவாய்! தவிராய்
மூளும் வினையால் மூண்ட மோதும் சூலையும் ஈளையுமே. 119

ஈளை முதலாய பிணிகள் யிணைந்த யுடலைப் பேணி
நாளை நடப்பதறியாது வள்ளிமணாளனின் நல்லயிரு
தாளை வணங்காது போவாயோ? மனமே! நீயும் யெந்த
வேளையும் வேலை வணங்கிருப்பாய்! கள்ள மகற்றியே. 120

கள்ளகுவாற்பையாகிய மனதை ஒருநிலைப்படுத்தி வள்ளிமணாளனே!
தெள்ள தெளிவுற யுனையே புகுத்தி தொழுதழுது
அள்ள குறையா யன்பாலாங்கே யானந்தங் காணயாட்
கொள்ளவே வாருமைய்யா! தவிராய் யினியோர் பிறப்பையே! 121

பிறவியலையாற்றிற் புகுதாதபடி பேற்றினை பெற வள்ளிமணாளனே!
அறமு மகத்தின் தூய்மையு மடியாரொடு கூடுஞ் செயலுந்
திறமுந் திருவடியினழகை பாடும் பணியு மென்றும்
மறவா மதிநிலையும் பெற்றிடயருளாய்! ஞானமும் அறிவுமே! 122

அறிவழிந்து ஆணவ மலத்தோடு திரிந்துழன்று வள்ளிமணாளனே!
நெறியழிந்து நிதானமிழந்து வகையழிந்தைம்
பொறியழிந்து போகாதுனையே போற்றித் துதித்திட யென்
குறியறிந்து நீயும் வரமே யருளாய் ஆறுமுகவோனே! 123

ஆறுமுக மான பொருளை யநுதினமு மருள்வாய் வள்ளிமணாளனே!
மாறும் மாயாவுலகினில் மயங்கி தடுமாறி யூனோடு
ஊறும் பிணியுந்துயரமுங் கொண்டு யழிவேனோ?யறியேனே!
ஏறுமயில் வாகனா! தீராயென்னோடுறையுங் குறை களையே. 124

குறைவதின்றி கூறிய குண நலன்களையடைந்து மாய
திறையு மகன்றிட தெளிந்து திருவடிக்கே தொண்டுகள் புரிந்திட
கறை பொருந்திய காலர் கைபடாது கருணையோடு காத்திட
மறைபொருளானவனே! வள்ளிமணாளனே! வாரும் அற்றைக்கே! 125

அற்றைக் கலரெடுத்தருமையாய் மாலை தொடுக்கும்
பற்றையேப் பெற்று பொற் சரணமேச் சாற்றி வள்ளிமணாளனே!
கற்றைச் சடையார் பங்கிலுறையுங் கமலாம்பிகையின் மைந்தனே!
எற்றைக்கும் யுமக்கு தொண்டே புரிய யருளாயெனக்குமே! 126

எனக்கென யாவும் பெற்றிரப்பவர்க்கு சற்றாகிலு மீந்திடவும்
மனத்தினில் மாசுகளையகற்றி நல்மதியைப் பெற்றிடவுந்தினைப்
புனத்தினில் விருத்தனாய்! குறத்தியைமணந்த வள்ளிமணாளனே!
உனக்காளாகும் பேரானந்தத்தோடு நல்காயென்றும் ஆனாதே! 127

ஆனாத ஞான புத்தியினை வினையேனுக்கு விரித்தளிக்கவும்
தானாக யுனது திருவடியை தினஞ் சிந்தித்து பாடவும்
மானாக துள்ளித் திரிந்தவள்ளிக்கு மணவாளனே! யமரர்
கோனானயுனது காட்சியை யருளாய் திருப்புகழ் தேனுடனே! 128

தேனுந்து முக்கனிகளோடு கன்னலுஞ் சேர்த்து மேனியில் நித்தம்
தானுந்து மாவின் பாலொடு யநுதினமுமாடி மகிழும்
வானுந்து தாரகை களிடையே திங்களாய்த் திகழும் வள்ளிமணாளனே!
நானுந்தன் யடிமையாய் தொழுதிட யருளுக யுருகிடும் ஊனே. 129

ஊனே யொடுங்கி யொளியுங் குன்றி முதுகும் வளைந்து
கூனேயாகி கோலுங் கொண்டு திரியுந் நாளில்
மானே நிகராள் வள்ளி மணவாளா! துணையாய் வருவாய்
நானே யுந்தன் நாமஞ் செப்பத் தீராயிருவினையே. 130

வினை திரளுமொரு விதியின் வயப்பட்டு மாளாது
உனை நினைந்துய்ந்திட யருளாய் வள்ளிமணாளனே! ஆண்
பனையுங் குலைகள் ஈன! யதிசய திருமறை யோதியவ!
எனையறிந்திட துணை புரிந்திட வாராய் வானோருடனே! 131

வானோர் வழுத்துனது செந்தாமரை பாதங்களில் சிந்தையை
தேனோடு பாலுங் கலந்தாற் போற் யொன்றாது வள்ளிமணாளனே!
ஏனோ நிலையாப்பொருளை யவனியில் நிதமே காத்து
ஊனோடு முயிரோடமழிவேனோ தாருமுனதருளை அன்பாகவே! 132

அன்பால் வள்ளிமணாளனை விரிந்தயிவ்வுலகினில் மறவாது நினைந்து
ஒன்றோடொன்றாக யிணைத்து ஆரணியடியார்க்கடியவன் கூறிய
சொன் மாலைகள் நாலொடு நாலெட்டும் ஈராறெட்டும் நவிலுவார்
இன்முகத்தோடு யெல்லா நலனும் பெற்றுயின்யுற்றிருப்பாரே!


-------------------------------------------------------------------------------































Popular posts from this blog

அருள்மிகு அங்காளம்மன் அந்தாதி Arulmigu Angalamman Anthathi

செந்திலாதிபன் செண்பகமாலை மூலம் Senthilathiban Shenbaga Malai Moolam