Posts

Showing posts from 2016

வேதாரண்யேச்சுரர் Vedharanyechurar

Image
  பாதாரமே ஓர் துணை யென்றிருந்தே னரனே நீதான் வருஞ்சுமையை நீக்கச்செய் வையேயு னோதா உண்மையை உளுணர வைத்த ஒளியே நீயே ஆதாரமாய் அடியேனுக்கு வேண்டியதை தருக ! பாதாரமே ஓர் துணை என்று இருந்தேன் அரனே ! நீதான் வருஞ் சுமையை நீக்கச் செய்வையே உன் ஓதா உண்மையை உள் உணர வைத்த ஒளியே நீயே  ஆதாரமாய் அடியேனுக்கு வேண்டியதை தருக!  பொழிப்புரை:- திருவடியே ஒரு துணை என்று இருந்தேனே சிவனே,  நீதான் வருகின்ற சுமையை நீக்கச் செய்வாயே,  உன்னுடைய ஓதா (சொல்லமுடியாத) உண்மையை உள்ளே உணர வைத்த ஒளியே,  நீயே  ஆதாரமாய் அடியேனுக்கு வேண்டியதை தருக! கருத்துரை -   சிவனே! நீ தான் வருகின்ற துயரங்களையும், சுமைகளையும் நீக்க வல்லவன் ஆயிற்றே என்று உனது. திருவடியே எனக்கு ஒரு துணை என்று எண்ணி இருந்தேனே ! வாக்கினால் சொல்ல முடியாத உனது மெய்பொருள் தன்மையை எனது உள்ளத்தினுள்ளே உணர வைத்த  ஒளியே !  நீயே எனக்கு ஆதாரமாக இருந்து வேண்டியதெல்லாம் திருவருள் செய்வாயாக !  பரதாரம் - திருவடி,  ஓதா - சொல்ல முடியாத,   உண்மை - மெய்பொருள், உள் - உள்ளம் திருத்தல பெருமை:-   சுவாமி  -...

ஆதிகும்பேச்சுரர் Athikumbechurar

Image
வேதியனை யோர் விடையேறிய காரிய காரணனை மாதினை மெச்சுமோர் மணியைச் செல்வ பேறை ஓதியும் மறையை நன்கு உணரச் செய்தானை பாதிமதி சூடியவனை தொழ ஆவதெலாம் நலமே ! வேதியனை ஓர் விடை ஏறிய காரிய காரணனை  மாதினை மெச்சும் ஓர் மணியைச் செல்வ பேறை ஓதியும் மறையை நன்கு உணரச் செய்தானை பாதிமதி சூடியவனை தொழ  ஆவது எலாம் நலமே ! வேதியன் - வேதப்பொருளானவன்,  விடை - எருது ,  ரிஷிபம்,   மாது - உமையம்மை,   பேறை - உயர்ந்த,  மேன்மை, பயன்,   மறை - வேதம் பொழிப்புரை -  வேதம் உரைத்தவனை ஒரு எருது ஏறிய காரிய காரணமானவனை, உமையம்மையை விரும்பும் ஒரு மணியை,  செல்வத்தின் பயனை, மறையை ஓதி நன்றாக உணரச் செய்தவனை, பிறை சந்திரனை சூடியவனை துதிக்க நடப்பதெல்லாம் நன்மையே ! கருத்துரை:-   அன்று ஆல மரத்தின் கீழ் சனகாதி முனிவர்கள் நால்வருக்கும் வேதங்களை உபதேசித்தவனை, எங்கும் ரிஷப வாகனம் ஏறிச் செல்பவனை, எல்லா செயல்களுக்கும் காரணமாகவும் கர்த்தாகவும் இருப்பவனை,  உமா தேவியை விரும்பும் மணி போன்றவனை, செல்வத்தின் பயனாக இருப்பவனை,  தேவர்களும், முனிவர்களும், தன் அடியார்களும் நன்றாக...

மாத்ருபூதேச்சுரர் Mathruboothechurar

Image
செகத்தி லோர் தாயுமாய் வந்தானை பரவிய யுகத்தின் சுழற்ச்சியைச் செயுந் தேனை அகப்பூவி லுறையு மருமருந்தை பணிய மகத்தில் புகுஞ்சனியும் மாறி நன்மை செயுமே ! செகத்தில் ஓர் தாயுமாய் வந்தானை பரவிய  யுகத்தின் சுழற்ச்சியைச் செயுந் தேனை  அகப்பூவில் உறையும் அரு மருந்தை பணிய  மகத்தில் புகுஞ் சனியும் மாறி நன்மை செயுமே ! பொழிப்புரை:- பூவுலகில் ஒரு தாயுமாகி வந்தவனை,  பரந்த யுகத்தின் சுழற்ச்சியைச் செய்யும் தேனை, உளம் (எனும்)  பூவில் உறைகின்ற அரிய மருந்தை வணங்க மகத்தில் ( நட்சத்திரம்) புகுந்த சனி கிரகமும் நன்மை செய்யுமே!.  கருத்துரை :-  இப்பூவுலகில் துணையிலா ஒரு வணிக குலப் பெண்ணின் பிரசவ காலத்தில், எல்லாம் வல்ல பரம்பொருளாகிய சிவனை தனக்கு துணையாக இருக்கும்படி வேண்டிக் கொள்ள ஈசனும் அப்பெண்ணின் தாயைப் போலவே உருமாறி வந்து பிரசவம் பார்த்தானை,  பரந்து விரிந்துள்ள இந்த யுகத்தின் செயல்பாடுகளை செய்யும் தேன் போன்று இனிப்பவனை, உள்ளம் எனும் பூவில் உறைகின்ற அரிய மருந்தாய் இருப்பவனை வணங்கி தொழுதால் மக நட்சத்திரத்தில் புகுந்த சனி கிரகமும் நன்மையே செய்யும்.. மக நட்சத்திரமானது  ...

தான்தோன்றீச்சுரர் Thanthondrechurar

Image
மன்றுள் ஓர் மாணிக்கமே! மண்ணே மாரனை வென்ற பூரண சுத்தசைவனேச் சொலொன்றீவதும் என்றோ யென்பால் தோன்றுமோ யிரக்கம் நன்றுஎன கருணையொடுன் தாளெனக் கருளுக! மன்று உள் ஓர் மாணிக்கமே! மண்ணே மாரனை வென்ற பூரண சுத்த சைவனேச் சொல் ஒன்று ஈவதும் என்றோ என் பால் தோன்றுமோ இரக்கம்  நன்று என கருணை யொடு உன் தாள் எனக்கு அருளுக! மன்று - சபை, அம்பலம்,  மண்ணே - மண்ணுக்கு அதிபதியே,  மாரன் - மன்மதன்,   ஈவது - தருவது,   இரக்கம் - பரிவு,  கருணை , தாள் -  திருவடி  நன்று - நன்மை,  நல்லது. பொழிப்புரை:- பொற்சபையில்  (ஆடுகின்ற) ஒரு மாணிக்கமே! மண்ணே,  மன்மதனை  வென்ற பூரண சுத்த சைவனே, (உபதேச) சொல் ஒன்று தருவதும் என்றோ என்மேல்  தோன்றுமோ இரக்கம் நன்மை என கருணையொடு உன் திருவடியை எனக்கு அருளுக! கருத்துரை:-  பொன் அம்பலத்தில் ஆடுகின்ற ஒரு மாணிக்கமே ! பஞ்ச பூதங்களில் மண் வடிவாக திகழ்பவனே! மன்மதனை வென்ற பரிபூரண சுத்த சைவமாய் விளங்குபவனே, அடியேனுக்கு உபதேச சொல் ஒன்றை தந்து ஆள்வதும் எந்த நாளோ தெரியவில்லையே ! அடியேன்பால் உனக்கு பரிவு தோன்றாதோ!  எல்லாம் நன்மைய...

முதுகுன்றீச்சுரர் Mudukundreechurar

Image
முதுமையை சேர்பிணி யொடுவரும் இடரவை எதுவாயினுஞ் சுவறிட சிவச்சொ லொன்றீய மதுகொன்றை மத்தங் குறிஞ்சி கூவிளமும் புதுபொலி வோடணியு மீசனை முக்கண்ணனைதுதி ! முதுமையை சேர் பிணி யொடு வரும் இடர் அவை எதுவாயினுஞ் சுவறிட சிவச் சொல் ஒன்று ஈய மது கொன்றை மத்தங் குறிஞ்சி கூவிளமும்  புது பொலிவொடு அணியும் ஈசனை முக்கண்ணனை துதி!  முதுமை - வயது கடந்த நிலை,    சுவறிட - விலகிட,  பொடியாக,  இடர் - துயரம்,  மது  -   தேன்,   மத்தம் - ஊமத்தம் மலர்,   கூவிளம் - வில்வம்,  பொலிவு  - அழகு. பொழிப்புரை:- முதுமையை சேர்ந்த பிணியொடு வருகின்ற துயரங்கள்   எதுவாயினும் விலகிட,  சிவச் சொல் ஒன்று அருள தேன் கொன்றையும் ஊமத்தமும் குறிஞ்சியும் வில்வமும் புதுபொலிவோடு அணியும் ஈசனை முக்கண்ணன்னை துதிசெய்க! கருத்துரை:-   எடுத்த மானிட பிறவியில் வயதும் முதிர்ந்து இயலாத நிலையில் வரக்கூடிய நோய்களால் ஏற்படும் துயரங்கள் எதுவாக இருந்தாலும் அவைகள் விலகுவதற்குரிய ஒரு சிவச் சொல்லை உபதேசமாக பெற்றிட, தேன் ஒழுகும் கொன்றை மலரோடு  ஊமத்தம் மலரும், குறிஞ...

ஓணகாந்தீச்சுரர் OnaKanthechurar

Image
சேவதேறியோர் சூலமுந் தாங்கிய பரமாய் நாவதிலுறை சுகானுபவ அச்சிவத் தீயே ஆவணந் தானவைமுன் காட்டி அடிமையாய் பாவணம் பாடவைத்தா னவனைஓதி உய்வடைவீர்! சேவு அது ஏறி ஓர் சூலமுந் தாங்கிய பரமாய்  நாவு அதில் உறை சுக அனுபவ அச்சிவத் தீயே  ஆவணந்தான் அவை முன் காட்டி அடிமையாய்  பாவணம் பாட வைத்தான் அவனை ஓதி உய்வு அடைவீர்! சேவு - எருது,    பரமாய் - பரம் பொருளாய்,  சுகானுபவம் - இனிய அனுபலம்,  ஆவணம் - அடிமை  பத்திரம்,   பாவணம் - தேவாரம். பொழிப்புரை:- எருது ஏறி ஒரு சூலம் ஏந்திய பரம் பொருளாய் நாவில் உறைகின்ற இனிய அனுபவமாகிய அந்த சிவத் தீயே ஆவணத்தை சபை முன் காட்டி அடிமை கொண்டு (தேவார) பாடல்களை பாட வைத்தான்,  அவனை பாடி நற்கதி அடைவீர்! கருத்துரை:-  எருதாகிய ரிஷபத்தின் மேல் ஏறி ஒரு கையில் சூலமும்  தாங்கி சிவபரம் பொருளாய் அடியார்கள் நாவில் உறைகின்ற அந்த பேரானந்த அனுபவமாகிய சிவ ஒளியே, அன்று சுந்தர  மூர்த்தி சுவாமிகளின் திருமணத்தின் போது சபையோர் நடுவே அடிமை ஓலையை (ஆவண பத்திரம்) காட்டி அவரை அடிமை கொண்டு சிறந்த நயமிக்க பாக்களாகிய தேவாரத்தை பாட வைத்த...

மாசிலாமணீச்சுரர் MasilaManeechurar

Image
பூசிநீறை பார்புகழ வெள்ளேறேறி நாரணியொடு வீசியாடு சுவலில் தாழ்ச்சடை யணீசனே! மாசி மகத்தில் உலாவரும் மறையவனே ! வாசிதீர வளமுடன்வாழ மாகருணை புரிவீரே ! பூசி நீறை பார் புகழ வெள்ள ஏறு ஏறி நாரணியொடு வீசியாடு சுவலில் தாழ்ச் சடை அணி ஈசனே!  மாசி மகத்தில் உலா வரும் மறையவனே !  வாசி தீர வளமுடன் வாழ மா கருணை புரிவீரே ! ஏறு - ரிஷபம்,   சுவல் – தோள்,   வாசி – குற்றம்,  வேறுபாடு,  தாழ்சடை – தாழ்ந்து படர்ந்த சடை,   நாரணி - உமையவள் பொழிப்புரை:- திருநீற்றை பூசி உலகம் புகழ வெள்ளை எருது ஏறி நாரணியொடு தோளில் வீசி ஆடுகின்ற தாழ்சடை அணிந்த ஈசனே ! மாசி மகத்தில் உலா வரும் வேத முதல்வனே ! குற்றம்  இல்லாது வளமுடன் வாழ பெருங் கருணை புரிவீரே !   கருத்துரை:-  திருநீற்றை திருமேனி எங்கும் பூசி உலகம் புகழ உமா தேவியோடு வெள்ளை எருது ஏறி  செஞ்சடை யானது திருத் தோளில் தவழும்படி அணிந்து,   எங்கும் நிறைத்து திருநடனம் ஆடுகின்ற ஈசனே! மாசி மாதத்தில் மக நட்சரத்தில் ரிஷப வாகனத்தில் வலம் வருகின்ற வேத நாயகனே!   அடியேன் குற்றங்கள் எல்லாம் தீர்ந்து ...

நீலகண்டேச்சுரர் Neelakandechurar

Image
ஆலமுண்டார் யறிந்தருள் செய்வா ரவர் கோலமொடுச் சுற்றிவர இச்சைகொண்டே ஞாலமு மண்டமிரவு பகல் செய்தாரவரைச் சீலமொடிருத்தி துதித்து நீர் வாழ்வீரினிதே! ஆலம் உண்டார் அறிந்து அருள் செய்வார், அவர் கோல மொடுச் சுற்றி வர இச்சை கொண்டே ஞாலமும் அண்டம் இரவு பகல் செய்தார் அவரைச் சீலமொடு இருத்தி துதித்து நீர் வாழ்வீர் இனிதே! ஆலம் -  ஆலகால விஷம்,    இச்சை - விருப்பம்,    ஞாலம் - உலகம்,  அண்டம் - ஆகாயம்,  வெட்ட வெளி,  சீலம் - நற்குணம். பொழிப்புரை:- ஆலகால விஷமுண்டார் அறிந்து அருள் செய்வார்,  அவர் கோலங்கள் கொண்டு (உலகை) சுற்றிவர இச்சை கொண்டே உலகம், அண்டம், இரவு பகல் படைத்தார், அவரை  நற்குணங்களொடு (மனதில்) இருத்தி துதித்து நீங்கள் இனிமையாக வாழ்வீர்கள்! கருத்துரை: -  அன்று ஆலகால விஷத்தை உண்ட சிவபெருமான் தன் அடியார்களுக்கு எது எப்போது எப்படி அருள் புரிய வேண்டும் என அறிந்து அப்படி அருள் செய்வார். அவர் பல வேடங்களைக் கொண்டு இப்பூவுலகில் சுற்றிவர விருப்பங் கொண்டே உலகமும் அண்டமும் (ஆகாயம்) இரவும், பகலும் உண்டாக்கினார் அவரை நல்ல உயர்ந்த குணங்களொடு உள்ளத்தில் இரு...

சுந்தரநடராசர் SundaraNataRasar

Image
திருமறை யோர் புகழ சடைவீசி பொற்சபையி லொரு கால்பராவி யாடும் நடராசனை நும் இருகரங் கூப்பித் தலையால் வணங்க வருந்துயரகன்று வாழ்வு சுபீட்சமடையும்! திரு மறையோர் புகழ சடை வீசி பொற்சபையில்  ஒரு கால் பராவி ஆடும் நடராசனை நும்  இரு கரங் கூப்பித் தலையால் வணங்க  வருந் துயர் அகன்று வாழ்வு சுபீட்சம் அடையும்!  மறை - வேதங்கள்,    பராவி - விரிவாக எங்கும் நிறைந்து,   கூப்பி – சேர்த்து,  சுபீட்சம் – ஷேமம்,  நன்மை,  செழிப்பு. பொழிப்புரை:- வேத நெறி அந்தணர்கள் புகழ சடை வீசி பொற்சபையில் ஒரு காலை எங்கும் நிறைத்து ஆடும் நடராசனை  உங்கள் இரு கரங்களை கூப்பி தலையால் வணங்க  வருகின்ற துயரம் நீங்கி வாழ்வு வளம் அடையும்! கருத்துரை:- வேதம் ஓதும் அந்தணர்கள் போற்றி புகழ, சடையை விசி பொன்னம்பலத்தில்  எங்கும் நிறைத்து ஆடுகின்ற நடராச பெருமானை உங்கள் இருகைகளைக் கொண்டு கூப்பித் தலையால் வணங்க,  வருகின்ற துயரங்கள் எல்லாம் நீங்கி வாழ்வும் செழிப்பு அடையும்.!  திருத்தல பெருமை:-   சுவாமி  -        சுந்தர நடராசர்  அம்பாள்...

காளஅத்தீச்சுரர் Kalatheechurar

Image
அளவிலா யோர் பேரானந்தங் கொண்டுரவொடு இளவேனில் சுகம்போன்றுச் சீவனை தீண்டி குளத்தில் மூழ்கி அவனருள் குழைந்து உளம் அவன்பாற் செலுங்கால டைவீர்சித்தி! அளவு இலா ஓர் பேரானந்தங் கொண்டு உரவொடு இளவேனில் சுகம் போன்றுச் சீவனை தீண்டி குளத்தில் மூழ்கி அவன் அருள் குழைந்து உளம் அவன் பாற் செலுங்கால் அடைவீர் சித்தி! உரவு – வலிமை, வேகம்,   இளவேனில் – வசந்தகாலம்,   சீவன் - ஆன்மா தீண்டி - தொடுவது,   குளம் - இன்பமாகிய அருள் குளம்,  குழைந்து – கலந்து, சேர்ந்து. பொழிப்புரை:- அளவில்லாத ஒரு பேரானந்தம் கொண்டு அதிகமான இளவேனில் (காற்று) சுகம் போன்று சீவனை தீண்டி, (அருள்) குளத்தில் (மனம்) மூழ்கிச் சிவனருள் கலந்து, உள்ளம் இறைவனிடம் செல்லும்போது அடைவீர்  வீடுபேற்றை! கருத்துரை:-   இளவேனில் (வசந்த கால) தென்றல் காற்று வேகமாக வீசித் தீண்டும் இனிமையான சுகத்தைப் போன்று, சிவபெருமான் தனது அளவிட முடியாத பேரானந்த அருளைக் கொண்டு சீவன்மாவை தீண்டி உள்ளத்தைச் சிவனருள் குளத்தில் மூழ்கிக் குழைந்து நெகிழச் செய்யும் அருட்செயலினால், உள்ளம் மாசகன்று தூய்மையாகி அவரிடம் செல்லும் பொது, பிறவிப் பய...

சலகண்டேச்சுரர் Salakandechurar

Image
கலந்த தோர் கருவில் உயிரும் பரந்து பல நாளுஞ் சுற்றி முற்றிச் சுருண்டே உலகு கண்டு உருவங்கள் மாறி யழியாமல் நலந்தரும் நிமலாயுன் சபையின் கண்வைக! கலந்தது ஓர் கருவில் உயிரும் பரந்து  பல நாளுஞ் சுற்றி முற்றிச் சுருண்டே  உலகு கண்டு உருவங்கள் மாறி அழியாமல்  நலந் தரும் நிமலா உன் சபையின் கண் வைக! பரந்து - விசாலமான விரிந்த, வியாபித்து,    சபை - திருச்சபை,  திருவடி நிமலன் - சிவன். பொழிப்புரை:- சேர்ந்த ஒரு கர்பத்தில் இவ்வுயிரானது வியாபித்து பல நாட்கள் சுழன்று முதிர்ச்சி அடைந்து சுருண்டு (பின்) பூமியைக் கண்டு (தன்) வடிவங்கள் மாற்ற மடைந்து அழிந்து போகாமல் நன்மைகள் அருளும் சிவனே உனது திருச்சபையில் வைத்திடுக! கருத்துரை - இவ்வுயிரானது ஒரு தாயின் கர்பத்தில் சேர்ந்து விசாலமாய் முன்னூறு நாட்கள் தங்கி அங்கே மேலுங் கீழுமாய் சுழன்று முதிர்ச்சி அடைந்து,சுருண்டு பின் வெளியே வந்து இம்மண்ணுலகை காண்கிறது. அதன் பிறகு அது மழலை பருவம்.  பால பருவம்,  வாலிப பருவம், முதுமை பருவம் என பல வடிவங்களாக மாற்றம் அடைந்து இறுதியில் அழிந்து போகிறது. நன்மைகள் அருளும் சிவபரம் பொருளே இ...

இராமநாதேச்சுரர் RamaNathechurar

Image
சிலையில் கோர்த்த சரமேழு மராமரமுங் குலைந் துச்சுவற எய்தச்சீலத் தேவன் அலைநாதன் தொழுத மங்கை பாகனைநீர் மலைராசன் மகளோடு தொழுது இருவினை களைவீரே! சிலையில் கோர்த்த சரம் ஏழு மரா மாரமுங்  குலைந்துச் சுவற எய்தச் சீலத் தேவன்  அலை நாதன் தொழுத மங்கை பாகனை நீர்  மலைராசன் மக ளோ டு தொமுது இரு வினை களைவீரே ! சிலை – வில்,  இரு வினை - நல்வினை,தீவினை,   சரம் - அம்பு, களைவீரே – நீக்குவிரே ,  சுவற – சிதற,  ஊடுறுவ,  சீலத்தேவன் – இராமன்,  அலை நாதன் – வருணன்,   மலைராசன் – இமவான். பொழிப்புரை:- வில்லில் பூட்டிய அம்பு ஏழு மரா மரங்களை  துளைத்து ஊடுறுவி வர செலுத்திய நற்குணமுடைய தலைவன் (இராமனும்) வருணனும் வணங்கிய பெண்ணை ஒரு பாகம் உடையவனை  நீங்கள் இமவான் மகளோடு  வணங்கி  இரு வினைகளை நீக்குவீர் ! கருத்துரை:- தனது வனவாச காலத்தில் தன் ஆற்றலை குரங்குகளின் அரசனான சுக்ரீவனுக்கு நிரூபிக்கும் பொருட்டு தனது வில்லில் பூட்டிய அம்பானது அங்குள்ள ஏழு மரங்களை ஒருசேர துளைத்து ஊடுருவிக் கொண்டு வரும்படி செலுத்திய நற்குணமுள்ள தலைவனாகிய இராம பிரானும், சமுத்திர ர...

அருணாசலேச்சுரர் Arunachalechurar

Image
உருவமோ ஓர்சடையன் ஊர்தோறு மிரத்தல் தருவதோ சுத்தஞான இச்சை தழலேகையினில் சருமமோ அண்ணா ர்க்குடை தொழுமின் கருநோய் களைந்து இனிதே அவனுள்சேர்வீர்!  உருவமோ ஓர் சடையன் ஊர் தோறும் இரத்தல்  தருவதோ சுத்த ஞான இச்சை தழலே கையினில்  சருமமோ அண்ணார்க்கு உடை தொழுமின்  கருநோய் களைந்து இனிதே அவன் உள் சேர்வீர்!  இரத்தல் - பிட்சை,   கருநோய் – பிறப்பு,   இச்சை - விருப்பம், சருமம் - தோல்,   தழல் – அக்கினி,   களைந்து - விலக்கி பொழிப்புரை:- வடிவமோ ஓர் சடை முடியன் ஊர் எல்லாம் பிச்சை எடுத்தல் அருளுவதோ நிர்குண ஞான விருப்பம் அக்கினி கரங்களில் தோலோ அவர்க்கு உடை  (ஈசனை)  வணங்குவீர் பிறப்பை நீக்கி  இன்பமோடு அவன் உள்ளே சேருவீர் ! கருத்துரை:-   ஈசன் சடா முடி தரித்த உருவத்தோடு காட்சி தருபவன். அதனால் சடையன் என்ற சிறப்பு பெயரும் உண்டு. அடியார்கள் பொருட்டு ஊர் ஊராகச் சென்று பிட்சை எடுத்தவன். அது வல்லாது தாருகாவன ரிஷிகளை அடக்குவதற்கு என்றே பிட்சாடனர் வேடங் கொண்டு ரிஷி பத்தினிகள் வீட்டு வாசல் தோறும் பிட்சைக்கு சென்றவன். அதனால் பிட்சாடன மூர்த்...

ஏகாம்பரேச்சுரர் Ekambarechurar

Image
ஆற்றினை யோர்பாகம் வைத்து அங் காரஞ்சூடி நீற்றினை சுத்தமொடு நச்சி டுவரே கூற்றைப் பற்றுதைத்தம் மானிக் குகந்தவர் காற்றுமானவர் அவரை ஏத்த வினையறுமே! ஆற்றினை ஓர் பாகம் வைத்து அங்கு ஆரஞ் சூடி நீற்றினை சுத்தமொடு நச்சி இடுவரே  கூற்றைப் பற்றி உதைத்து அம்மானிக்கு உகந்தவர் காற்றும் ஆனவர் அவரை எந்த வினை அறுமே! ஆற்றினை - கங்கையை,   கூற்று - இயமன் ,   ஆரஞ் - கொன்றை மாலை,   மானி- மார்கண்டேயர்,   நீற்றினை - திருநீறு,   உகந்தவர் - அருளியவர்,    நச்சி - விரும்பி,    ஏத்த - போற்றி, வணங்கி. பொழிப்புரை:-   கங்கையை ஒரு புறம் வைத்து அங்கு மாலையும் தரித்து  திருநீற்றை தூய்மையொடு விரும்பி அணிபவரே இயமனை பிடித்து உதைத்து அந்த மார்கண்டேயருக்கு பொருத்தமானதை தந்தவர் காற்றாகவும் இருப்பார் அவரை (ஈசனை) வணங்க வினை நீங்குமே! கருத்துரை:-   கங்கையை தன் சடை முடியில் ஒரு புறமாக வைத்தும், அங்கே கொன்றை மாலையை சூடியும், தூய்மையான திருநீற்றை விரும்பி திருமேனி எங்கும் தரித்து கொண்டிருப்பவரும்,  இயமனை பிடித்து காலால் உதைத்து தள்ளியவரும், அந்த பக்தரான மார...